districts

img

அரசு உதவி கோரும் குத்துச்சண்டை வீரர் அபர்ணா

திருவள்ளூர், மே 29- நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம், வெள்ளி கோப்பையை வென்ற  அரசுப்பள்ளி மாணவி அபர்ணாவுக்கு  தமிழக அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் அருகில் உள்ள மாத்தூர் பகுதியை சேர்ந்தவர் தேவி, கண வனை  இழந்த இவருக்கு பிரவீன்உதயன் (13) என்ற மகனும், அபர்ணா (10) என்ற மகளும் உள்ளனர்.  அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வரும் சிறுமி அபர்ணா, முறைப்படி குத்துச்சண்டை பயிற்சி பெற்றுள்ளார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல்  29,30 ஆகிய தேதிகளில் நேபாளத்தில் நடைபெற்ற 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்டவர்களுக்கான  குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவிலிருந்து சிறுமி அபர்ணா உள்ளிட்ட  52 பேர் பங்கேற்றனர். அப்போது நடைபெற்ற  வயக்கோரோ போட்டியில் நேபாள நாட்டு வீராங்கனையுடன் மோதி 2ஆவது இடத்தை பிடித்து வெள்ளிக் கோப்பையையும், மூன்று சுற்றுகளாக நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கமும் வென்று  தாயகம் திரும்பியுள்ளார். இவர் ஜூலையில்  தாய்லாந்து நாட்டில் நடைபெற உள்ள குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க ஆர்வமாக உள்ளதாகவும் ஆனால் அதற்கான பொருளாதார வசதி தன்னிடம் இல்லாததால்,  அபர்ணாவை ஊக்குவிக்கும் வகையில்  தமிழக அரசு  தனக்கு உதவ முன்வர வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.