districts

img

விருதுநகர் மாவட்டத்தில் முதல்முறையாக புத்தகத் திருவிழா : இலச்சினை வெளியீடு

விருதுநகர், அக்.11- விருதுநகர் மாவட்டத்தில் முதல்முறை யாக நவம்பர் ,17 முதல் 27 வரை புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. இந்நிலையில் அதற்கான இலச்சினையை மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி வெளியிட்டார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி கூறுகையில்,  விருது நகரில் உள்ள கே.வி.எஸ்.மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வரும் நவம்பர் 17 முதல் 27 வரை புத்தகத் திருவிழா நடை பெற உள்ளது.  விருதுநகர் மாவட்டத்தின் சிறப்பாக சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் உள்ளது. எனவே, அந்த அணிலின்  உருவத்தின் மேல்  “விரு“ என்ற எழுத்துப் பொறிக்கப்பட்டு இலச்சினை யாக வெளியிடப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள், பிரபல எழுத்தாளர்களின் கருத்தரங்கு சிறப்புப் பட்டிமன்றங்கள், பள்ளி மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள், தொல்லி யல்துறை அரங்குகள் மற்றும்  அரசுத்துறை களின் திட்டங்கள் மற்றும் செயல்பாடு கள் குறித்த அரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனவே, அனைத்து தரப்பு மக்களும், மாணவ, மாணவியர்க ளும் அதில் கலந்து கொண்டு பயன்பெற லாம் என தெரிவித்தார். பின்பு, அனைவ ருக்கும் புத்தகத் திருவிழாவிற்கான அழைப்பிதழ்களையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வரு வாய் அலுவலர் ரவிக்குமார், நேர்முக  உதவியாளர் சிவக்குமார், கோட்டாட்சி யர்கள் அனிதா( சாத்தூர்), விஸ்வநாதன் (சிவகாசி), முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி, நகராட்சி ஆணையாளர் சி.ஸ்டான்லி பாபு ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.