பழனி, ஏப்.23- தமிழ்நாடு அறிவியல் இயக்கம்,பழநி கிளை மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் - கலைஞர்கள் சங்கம் பழனி கிளை சார்பில் உலக புத்தக தின விழா பழனி, நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பழநி கிளைத் தலைவர் பேராசிரியர் மீனா சுந்தர் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் கவிஞர் முத்துமாணிக்கம் வர வேற்றார். மேனாள் மாநிலத் தலைவர் பேரா சிரியர் மோகனா உரையாற்றினார். பழநி நகர்மன்றத் தலைவர் உமாமகேஸ்வரி, திண்டுக்கல் மாவட்ட அறிவியல் இயக்கத் தின் தலைவர் ராசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். எழுத்தாளர் பழனி ஷகான் கருத்துரை யாற்றினார். பொருளாளர் பாண்டியம்மாள் நன்றியுரை கூறினார்.