இடையக்கோட்டை, டிச.30- ஒட்டன்சத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பரப்பலாறு அணையில் படகு சவாரி தொடங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியான பாச்சலூர், வடகாடு, சிறுவாட்டுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் சிறு ஓடை ஆறாக மாறி வடகாடு மலைக் கிராமத்தில் உள்ள பரப்பலாறு அணைக்கு தண்ணீர் வருகிறது. இந்த அணை முற்றிலும் கருங்கற்க ளால் கட்டப்பட்டுள்ளது. கடந்த 1975ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் திறக்கப்பட்டதாகும். அணையை சுற்றி அடர்ந்து வளர்ந்த மரங்களை கொண்ட மலைப்பகுதியாக இயற்கையாக உள்ளது.
இந்த பரப்பலாறு அணையின் மொத்த உயரம் 90 அடி ஆகும். இந்த அணை யில் 197.95 மில்லியன் கனஅடி தண்ணீர் தேக்கலாம். அணை 266 அடி நீளத்தை கொண்டதாகும். ஒட்டன்சத்திரம் நகராட்சி, சுற்றுவட்டார கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாக பரப்ப லாறு அணை விளங்குகிறது. மேலும் ஒட்டன்சத்திரத்தை சுற்றியுள்ள 6 குளங்களு க்கு அணையில் இருந்து தண்ணீர் செல்கிறது. இதேபோல் நங்காஞ்சியாற்று படுகையில் விருப்பாட்சி முதல் ஜவ்வாது பட்டி வரை அமைந்துள்ள தடுப்பணைகள், ஆழ்துளை கிணறுகளுக்கும் ஆதாரமாக உள்ளது. இந்த குளங்களின் வழியாக இடை யக்கோட்டை நங்காஞ்சியாறு அணை க்கு தண்ணீர் சென்று அணை நிரம்பியவுடன் கரூர் அமராவதி ஆற்றில் செல்கிறது.
ஒட்டன்சத்திரம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பரப்ப லாறு அணையில் வனத்துறை மற்றும் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை யும் இணைந்து பூங்கா அமைத்தும், படகு சவாரி தொடங்கவும் நடவடிக்கை எடுத்தால் விடுமுறை நாட்களில் பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் சுற்றுலா பயணிகள் சென்று அணையை பார்வையிட்டு பின்னர் படகு சவாரி செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இதற்கு குறைந்த கட்டணம் வசூல் செய்வதற்கு நடவடிக்கை எடுத்தால் சுற்றுப்புர கிராமம் மற்றும் வெளி மாவட்ட சுற்றுலா பயணிகள் அதிகளவு பரப்பலாறு அணைக்கு விடுமுறை தினங்களில் வருவார்கள். பரப்பலாறு அணையில் பூங்கா மற்றும் படகு சவாரி தொடங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.