districts

img

உசிலம்பட்டி கண்மாய் நீர்வரத்திற்கு தடை...

மதுரை, அக்.20- மதுரை மாவட்டம் உசி லம்பட்டி பேருந்து நிலையம் எதிரே உள்ளது உசிலம்பட்டி கண்மாய். கிட்டத்தட்ட 55 ஏக்  கர் பரப்பளவு உள்ள இந்த கண்மாய் நிரம்பினால் உசி லம்பட்டி நகரின் தண்ணீர் தட்டுப்பாடு தீரும். நிலத்தடி நீர்மட்டமும் உயரும். உசி லம்பட்டியை சுற்றியுள்ள தொட்டப்பநாயக்கனூர், செட்டியபட்டி, உசிலம்பட்டி  கணவாய் பகுதிகளில் பெய் யும் மழை நீர் பேருந்து நிலையம் அருகே உள்ள கண்மாயை வந்தடையும். உச்சபட்சமாக அக்.16-ஆம் தேதி 53.2 மி.மீ., 17ல், 63.4 மி.மீ., மழை பெய்தும் இந்த கண்மாய்க்கு தண்ணீர் வந்து சேரவில்லை. உசிலம்பட்டி கணவாய் அருகே தான் அசுவமா நதி உள்ளது. அசு வமா நதியின் மூலம் அம்மா குளம், மாதரை, நல்லுத் தேவன்பட்டி, வடுகபட்டி உள்ளிட்ட கண்மாய்கள் பல னடையும். அதே நேரத்தில் கருக்கட்டான் கண்மாய் நிரம்பினால் அதிலிருந்து மாறுகால் பாயும் தண்ணீர் உசிலம்பட்டி கண்மாய்க்கு வரும். வில்லாணி மாசா ணியம்மன் கோவில் அருகே மடைகள் உள்ளிட்டவை மரா மத்து செய்யப்படாததால் உசிலம்பட்டி கண்மாய்க்கு தண்ணீர் வந்து சேரவில்லை.  மதுரை மாவட்ட நிர்வா கம் உசிலம்பட்டி கண் மாய்க்கு தண்ணீர் வந்து சேருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றொரு புறத்தில் 58-ஆம் கால்வாய் தண்ணீர் உசிலம்பட்டி கண்மாய்க்கு வந்து சேரும். 58-ஆம் கால்  வாய் 300 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால், 180 கனஅடி தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டதால் தண்ணீர் வந்துசேரவில்லை. தற்போது வைகை நீர்மட்டம் முழுக்கொள்ளளவை எட்டி யுள்ள நிலையில் தற்போது தண்ணீர் வந்து சேரும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் விவசாயிகள்.