districts

img

சிப்காட் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

ஒட்டன்சத்திரம், ஆக.5-  கள்ளிமந்தையம் அருகே சிப்காட் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கப்பல்பட்டி கிராமத்தில் உள்ள வீடுகளில் மக்கள் கருப்பு கொடி ஏற்றி போராட்  டம் நடத்தினர்.  தமிழக அரசின் சார்பில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தாலுகா கள்ளிமந்தையம் அருகே உள்ள ஈசக்காம்பட்டியில் சிப்காட் அமைக்கும் திட் டத்தை அறிவித்து அருகே உள்ள 1000 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்களை அர சின் சார்பில் எடுப்பதற்கு திண்டுக்கல் மாவட்ட நிர்வா கம் நடவடிக்கை எடுத்து வரு கிறது. சுற்றளவில் உள்ள அனைத்து கிராமங்களிலும், நிலத்தடி நீரை குடிப்பதற் கும், விவசாயம் செய்வதற் கும் பயன்படுத்த முடியாத அபாய நிலை ஏற்படும். இதனால் இக்கிரா மங்களில் விவசாயிகள் வாழ தகுதியற்ற நிலை ஏற்படும்.  எனவே தமிழக அரசு  கொண்டுவந்துள்ள சிப்காட்  திட்டத்தை ரத்து செய்ய வேண்  டும் என்று வலியுறுத்தி தொடர்ந்து இப்பகுதி விவ சாயிகள் மற்றும் பொதுமக் கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இத்திட்டத்திற்கு எதிர்ப்பு  தெரிவித்து நேற்று காலை கள்ளிமந்தையம் அருகே உள்ள கப்பல்பட்டி கிரா மத்தில் வசிக்கும் விவசாயி கள் மற்றும் மக்கள், தங்க ளது வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.