districts

மதுரை முக்கிய செய்திகள்

முதல்வரின் காலை உணவுத்திட்டத்தை விமர்சித்த பாஜக நிர்வாகி கைது

மதுரை, செப்.3- தமிழக முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை இழிவு  படுத்திய தினமலர் நாளிதழுக்கு அவர்களது வலைதளத்தி லேயே கடும் விமர்சனங்கள் பதிவிடப்பட்டிருந்தன. சமூக  ஊடகங்களும் விமர்சித்து வருகின்றன. தமிழக முதல்வ ரும் தமது கடும் கண்டனத்தை தெரிவித்தார். பல்வேறு  கட்சித் தலைவர்களின் விமர்சனத்திற்கு உள்ளானது தின மலர். இந்த நிலையில் முதல்வரின் காலை உணவுத் திட்டம்  குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான செய்தியை வெளியிட்ட குற்றச்சாட்டில் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகி  ஒருவரை  நாகுடி காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகி  அரசர்குளத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் (28). அக்கட்சி யின் சமூக வலைதளப் பிரிவின் புதுக்கோட்டை கிழக்கு  மாவட்டச் செயலாளராக உள்ளார். திமுக நிர்வாகி ஒரு வர் அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு, பின்னர் காவலுக்கு அனுப்பப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ரூ.1.25 லட்சம் மதிப்பிலான புகையிலை பறிமுதல்: இருவர் கைது

சாத்தூர், செப்.3- சாத்தூர் அருகே இரு கார்களில் கடத்தி வரப்பட்ட ரூ.1.25 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு இருவரைக் கைது செய்தனர். சாத்தூர் அருகே உள்ள ஆலம்பட்டி பகுதியில் தனிப்  படை காவலர்கள் வாகனச் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த இரு கார்களை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 18 மூடைகளில் அரசால் தடை  செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பது கண்ட றியப்பட்டது. அதன் மொத்த மதிப்பு ரூ.1லட்சத்து 26ஆயி ரத்து 576. புகையிலைப் பொருட்கள் மற்றும் கார்களை  பறிமுதல் செய்த காவல்துறையினர், தும்முசின்னம்பட்டி யைச் சேர்ந்த  குமார்(23), தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு  பகுதியைச் சேர்ந்த மனோகரன் (53) ஆகியோரைக் கைது  செய்தனர். புகையிலைப் பொருட்கள் கடத்தலைக் கண்டுபிடித்த  தனிப்படை காவலர்களை மாவட்டக் காவல் கண்கா ணிப்பாளர் ஸ்ரீனிவாசபெருமாள் பாராட்டினார்.

மின்னலுக்கு 10 பேர் பலி

ஒடிசா, செப்.3- ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில்  குர்தா மாவட்டத்தில் நான்கு பேரும், போலங்கிரில் இரு வர் மற்றும் அங்குல், பௌத், ஜகத்சிங்பூர் மற்றும் தேன்  கனல் ஆகிய இடங்களில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.  எதிர்வரும் அடுத்த நான்கு நாட்களில் ஒடிசா மாநி லத்தின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும் இந்திய  வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சனிக்கிழமை காலை ஒடிசாவின் புவனேஸ்வர் மற்றும் கட்டாக்கில் முறையே 126 மிமீ மற்றும் 95.8 மிமீ மழை பதிவாகி யிருந்தது.

கடலில் குளித்த இருவர் பலி

மதுரை, செப்.3- பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 12 பேர் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். இவர்  களில் மூன்று பேர் கடலில் குளித்துள்ளனர். அப்போது மூவரையும் கடல் அலை இழுத்துச் சென்றது. சுற்றுலாப் பயணிகள் அளித்த தகவலின் பேரில் கட லோர காவல்படையினர் பிந்து என்பவர மீட்டு சிகிச்சைக் காக சிகிச்சைக்காக கன்னியாகுமரியில் உள்ள தனியார்  மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மற்ற இரு வர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் மணி, (30), சுரேஷ் (30) என காவல்  துறையினர் அடையாளம் கண்டுள்ளனர். கன்னியாகுமரி கடலோர பாதுகாப்புக்குழும காவல்துறையினர் விசா ரிக்கின்றனர்.

மதுரை மாநகராட்சி மண்டலம் 4-இல்  நாளை மக்கள் குறைதீர் முகாம் 

மதுரை, செப்.3-  மதுரை மாநகராட்சி மண்டல்ம் 4-இல் செவ்வாயன்று மக்கள் குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. முகாமிற்கு  மேயர் தலைமை வகிக்கிறார். காலை 10 மணி முதல் பகல்  12.30 மணிவரை மக்கள் கலந்துகொள்ளலம் வார்டு பகுதிகள்: வார்டு எண்.29, செல்லூர், வார்டு  எண்.30 ஆழ்வார்புரம், வார்டு எண்.41 ஐராவதநல்லூர், வார்டு எண்.42 காமராஜர் சாலை, வார்டு எண்.43 பங்க ஜம் காலனி, வார்டு எண்.44 சேர்மன் முத்துராமய்யர் ரோடு,  வார்டு எண்.45 காமராஜபுரம், வார்டு எண்.46 பழைய குய வர்பாளையம், வார்டு எண்.47 சின்னக்கடை தெரு, வார்டு எண்.48 லெட்சுமிபுரம், வார்டு எண்.49 காயிதே மில்லத் நகர், வார்டு எண்.53 செட்டியூரணி, வார்டு எண்.85  கீழவெளிவீதி, வார்டு எண்.86 கீரைத்துறை, வார்டு எண்.87  வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, வார்டு எண் 88  அனுப்பானடி, வார்டு எண்.89 சிந்தாமணி, வார்டு எண் 90  கதிர்வேல் நகர் ஆகிய வார்டுகளில் உள்ள மக்கள் குடி நீர், பாதாளச் சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனு மதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட தங்கள் கோரிக்கை மனுக்களை கொடுக்கலாம்.

வரவு - செலவு தகராறில்  வாலிபர் கொலை

 தேனி, செப்.2- தேனி மாவட்டம் சின்னமனூர் சாமிக்குளம் பகுதியைச்  சேர்ந்தவர் அபுதாகீர் மகன் காபில் (21).  இவர் அதே பகுதியைச் சேர்ந்த காதர் மகன் முஹமது  சமீர் என்பவரிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கியதாக கூறப்படு கிறது. இந்தப் பணத்தை திருப்பித் தர காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால் அவர்களுக்கு முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், காபில், முஹமது சமீரிடம் கடனை த் திருப்பித் தருவதாகவும், சின்ன மனூர் வண்டிப்பேட்டை பகுதிக்கு வருமாறு கூறி யுள்ளார். இதனைத் தொடர்ந்து முஹமது சமீர், அவரது  உறவினர் அலாவுதீனுடன் அங்கு சென்றார்.  அப்போது காபில் பணத்தைத் திருப்பிக் கொடுக்கா மல் தகராறு செய்து முஹமது சமீரைத் தாக்கி உள்ளார்.  இதனால் ஆத்திரமடைந்த இருவரும் காபிலை கத்தி யால் குத்தினர். இதில் காபில் உயிரிழந்தார். சின்னமனூர்  காவல்துறையினர் அலாவுதீனை கைது செய்தனர்.

காந்திகிராம பல்கலை.,யில்  தேசிய பயிற்சிப் பட்டறை

சின்னாளப்பட்டி, செப்.2- திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டு ஆராய்ச்சி மையம் சார்பில் ‘‘பண்பறி ஆராய்ச்சி முறைகள்’’ என்னும் தலைப்பில் தேசியப் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.  பயிற்சிப் பட்டறையில் பல்வேறு கல்லூரி, பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் கிராமப்புற மேம்பாடு,சுகாதாரம், சமூக அறிவியல், உள வியல் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்களும் கலந்து கொண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.   பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் இல.ராதாகிருஷ்ணன் (பொ), முனைவர்கள் முத்துக்குமரன், முத்துக்குமரன், எஸ்எம்.கார்த்திக், எம்.குணசேகரன், ஹிலாரியா ஞானசௌந்தரிமருத்துவர்கள் சுதர்ஷினி சுப்பிரமணியம், பிரியதர்ஷினி சிதம்பரம், விஜயப்பிரசாத் கோபிசந்திரன், உட்பட பலர்  கலந்துகொண்டனர். 

வேன் கவிழ்ந்து 13 பேர் காயம்

திருநெல்வேலி, செப்.3- திருநெல்வேலி அருகே ராமையன்பட்டி பகுதியில் வேன் கவிழ்ந்த விபத்தில் பச்சிளங்குழந்தைகள் உள்பட 13 பேர் பலத்த காயமடைந்தனர். திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பேட்டை ரஹமத் நகர் பகுதியைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் ஒரு வேனில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க இராஜபாளையத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 3) காலை புறப்பட்டனர். ராமையன்பட்டி அருகே திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைக் கடந்து சங்கரன்கோவில் சாலையில் வேன் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் மும்தாஜ் (33), அப்துல்லா ஷேக் (30), மீரான் (8), பீர் பாத்தி( 60), பீர் மைதீன் (59), மைதீன் அப்துல் காதர் (63), முகமது ரியாஸ் (2), அஹமது அஜ்மல் (2), கோதை (3), நூர்ஜகான் பீவி (85) உள்பட 13 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து மானூர் காவலதுறையினர் விசாரித்து வருகின்றனர்.

இரவு நேரம், விடுமுறை தினத்தில்  ஆய்வு செய்வதை தவிர்க்கக் கோரிக்கை

தேனி, செப்.2- இரவு நேரம், விடுமுறை தினத்தில் அதி காரிகள் ஆய்வு மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலு வலர்கள் சங்கத்தின் மாவட்டச் செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் பா.ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சு.தாமோதரன், மாவட்டப் பொருளாளர் அர்ச்சுணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில், மாவட்ட நிர்வாகம் நிறை வேற்றாத கோரிக்கைகள் குறித்து சென்னை  ஊரக வளர்ச்சி துறை இயக்குநரைச் சந்  திப்பது, அரசு பிற துறை பணிகளில் ஈடு பட வேண்டும் என ஆணை வழங்கும் போது மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப் படும் பணி ஆணையை முறையாக வட்டார  வளர்ச்சி அலுவலர்கள் மூலமாக வழங்கி னால் மட்டுமே பணிகளை மேற்கொள்வது. இரவு நேர ஆய்வு கூட்டம், விடுமுறை தின  ஆய்வு ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்  உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை  அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

தேனி, செப்.3- தேனி மாவட்டம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்  பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து 620 கன அடியாக உள்ளது. நீர் மட்டம் 118.40 அடியாக அதி கரித்துள்ளது. அணையில் இருந்து 300 கன அடி நீர்  திறக்கப்படுவதால் மின் உற்பத்தியும் நடந்து வருகிறது.  வைகை அணையின் நீர் மட்டம் 47.24 அடியாக உள்ளது.  கடந்த மூன்று நாட்களாக அணைக்கு வரும் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஞாயிறு காலை  332 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 69 கன  அடி நீர் வெளியேற்றப்படுகிறது. மஞ்சளாறு அணையின்  நீர்மட்டம் 49.20 அடியாக உள்ளது. வரத்து 141 கன அடி.  சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 76.25 அடி. வரத்து 30 கன அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 35.54 மி.கன  அடி. மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை  பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் மகிழ்ச்சிய டைந்துள்ளனர்.  மழையளவு: பெரியகுளம் 5,மஞ்சளாறு 28,வைகை அணை 54,போடி 1.2,பாளையம் 2.2 ,கூடலூர் 1.8 ,பெரி யாறு 1, தேக்கடி 0.2, வைகை அணை 54, கொடைக்கா னல் 20 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

மின்னல் தாக்கி  பலியானவருக்கு நிவாரணம்

விருதுநகர், செப்.3- விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா, நரிக்குடி அருகே உள்ளது இசலி கிராமம். இப்பகுதியைச் சேர்ந்த வர் சண்முகமுனீஸ்வரன். இவர் கடந்த ஆக.6-ஆம்  தேதி மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தமிழக அரசின் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4லட்சம் நிவாரண உதவியை மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார். 

மரத்திலிருந்து விழுந்தவர் பலி

நத்தம், செப்.4- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள லிங்கவாடியைச் சேர்ந்தவர் கோக்காளி. (57). இவர்  சனிக்கிழமை தனது வீட்டின் அருகில் உள்ள மாமரத்தில்  மாங்காய்கள் பறிப்பதற்காக மரத்தில் ஏறினார்.அப்போது  மரத்திலிருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காய மடைந்த கோக்காளி சம்பவ இடத்திலேயே பலியானார். நத்தம் காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.

உதவி செய்வது போல் திருட்டு

வெம்பக்கோட்டை, செப்.3- விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள வலையப்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி (52). தனியாக வசித்து வருகிறார். இவருக்கு  உதவி செய்ய அவரது அண்ணன் மகன் அஜித் குமார்,  தம்பி மகன் முத்துச் சல்வம் ஆகியோர் வீட்டிற்கு வந்து  சென்றுள்ளனர். இந்தநிலையில், முத்துச்செல்வத்திடம் தங்கச் சங்கிலி  ஒன்று இருந்தது. அது முத்துலட்சுமிக்குச் சொந்தமா னது எனத் தெரிய வந்தது. இதைப் பார்த்த முத்து லட்சுமியின் மகள் கலைகுமாரி, தனது தாயாரிடம் நகை  உள்ளதா? எனக் கேட்டுள்ளார். அப்போது, தங்கச் சங்கிலி மற்றும் நகைகள் காணா மல் போனது தெரிய வந்தது. இதுகுறித்து அவர் முத்துச்செல்வத்திடம் கேட்டபோது, அத்தை வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டார். திருடிய நகையில் கம்மலை தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து  பணம் பெற்றதாகவும், அதை அஜித்குமார் வைத்துள்ள தாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து இருவர் மீதும் முத்துலட்சுமி ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முத்துசெல்வத்தைக் கைது செய்தனர். 

விஷம் குடித்துத் தற்கொலை

கடமலைக்குண்டு, செப்.3- தேனி மாவட்டம் மயிலாடும்பாறை அருகே விஷம் குடித்து ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டார். மயிலாடும்பாறை அருகே மூலக்கடை கிராமத்தை சேர்ந்தவர் சூரியகலா (29). இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்து விட்டார். அதன் பின்னர் சூரியக்  கலா அவரது இரண்டு பெண் குழந்தைகளுடன் மூலக் கடையில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.  இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சூரியகலா சிறப்பாறையை சேர்ந்த செல்லப்பாண்டி என்பவருடன் பழகி வந்துள்ளார். இதற்குப் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மனமுடைந்த சூரியகலா சனிக்கிழமை இரவு வீட்டில் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார். கடமலைக்குண்டு காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.

27 நாட்களே ஆன  பெண் குழந்தை உயிரிழப்பு

மதுரை, செப்.3- மதுரை அருகே பிறந்து 27 நாள்கள் ஆன பெண் குழந்தை சனிக்கிழமை உயிரிழந்தது. மதுரை மாவட்டம், செல்லம்பட்டி அருகேயுள்ள கீழப்  பட்டி கிராமத்தைச் சேர்ந்த குரு ரஞ்சித், லாவண்யா தம்பதி யினருக்கு கடந்த ஆக. 6- ஆம் தேதி இரண்டாவதாக பெண்  குழந்தை பிறந்தது. ஏற்கனவே ஓர் வயதில் பெண் குழந்தை  உள்ளது. இரண்டாவது பிறந்த பெண் குழந்தைக்கு லாவண்யா சனிக்கிழமை பால் அளித்தார். சிறிது நேரம்  கழித்துப் பார்த்த போது, அந்தக் குழந்தை உயிரிழந்தது தெரிய வந்தது. இதுகுறித்து விக்கிரமங்கலம் காவல்துறை யினர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

திண்டுக்கல் பகுதியில் கனமழை  வீட்டுச்சுவர் இடிந்து விழுந்தது  உயிர் தப்பிய வயதான தம்பதியினர் 

சின்னாளப்பட்டி, செப்.2- திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூரை அடுத்துள்ள வுத்தம்பட்டியில் வசிப்பவர் பெருமாள் (84)- மூக்கம்மாள் (75) தம்பதியினர். இப் பகுதியில் பெய்த மழை யால் இவர்ளது வீட்டுச்சுவர் நள்ளிரவில் இடிந்து விழுந் தது. இதில் வீட்டிலிருந்து தொலைக்காட்சிப்பெட்டி, குளிர்  சாதனப் பெட்டி, வீட்டு உபயோகப் பொருட்கள் சேத மடைந்தன. தம்பதியினர் உயிர் தப்பினர்.

பாஜக ஆட்சியை அகற்றவே “இந்தியா” கூட்டணி
சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் பேட்டி

சிவகாசி, செப்.3- இந்தியாவை ஆளும் பாசிச வெறி பிடித்த பாஜக அரசை ஆட்சியில் இருந்து  அகற்றவே “இந்தியா” கூட்டணி உருவாகி யுள்ளது என்றார் சிபிஐ மாநிலச் செயலாளர்  இரா.முத்தரசன்.  சிவகாசியில் அவர் செய்தியாளர்களி டம் கூறியதாவது: ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மோடி  நடத்தும் கபட நாடகம். இந்திய வரலாற்றில்  குடியரசுத் தலைவராக பொறுப்பு வகித்து பதவி ஓய்வு பெற்றவர்கள் வேறு எந்த பத விக்கும் வந்தது கிடையாது. ஆனால், பாஜக  ஆட்சியில் ராம்நாத் கோவிந்த் பொறுப் பிற்கு வந்துள்ளார். அவர் இந்த பொறுப்பை ஏற்றிருக்கக் கூடாது. மோடியின் ஆட்சி பாசிசத்தின் வெளிப்பாடே. இந்த ஆட்சி விரையில் அகற்றப்படவேண்டும். நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் “இந்தியா” மகத்தான கூட்டணி உருவாகி இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி பாஜகவை ஆதரிப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன் றும் இல்லை. ஏனெனில் அவர் சுயமாக முடி வெடுக்கும் நிலையில் இல்லை என்றார் முத்தரசன்.