districts

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது பாஜக அவதூறு

திண்டுக்கல், ஜுன் 26- திண்டுக்கல் மாவட்டம் அடி யனூத்து ஒடுக்கம் பகுதி நிலப்பிரச்  சனையில் அவதூறு பரப்பி வரும்  பாஜகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி பதிலடி கொடுத்தது. திண்டுக்கல் அடியனூத்து ஊராட்சி மன்றத்தலைவராக ஜீவா னந்தம் உள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைமையிலான இந்த ஊராட்சியில் ஒரு பகுதி ஒடுக்  கம். ஒடுக்கம் பகுதி மாநகராட்  சிக்குச் சொந்தமான இடம் என்று கூறப்படுகிறது. அடியனூத்து ஊராட்சியும் தங்களுடைய இடம் என்று கூறுகிறது. இந்நிலையில் நல்லாம்பட்டி, சமத்துவபுரம் பகுதி  இளைஞர்களுக்கான விளை யாட்டுத்திடலுக்கான நிலத்தை யாரும் ஆக்கிரமித்துவிடக்கூடாது என்பதற்காக ஊராட்சி நிர்வா கம் வேலி அமைத்து பாதுகாக்கப் பட்டு வருகிறது.  இது தொடர்பாக கடந்த கூட்டத்  தில் பேசிய 33-ஆவது வார்டு திமுக உறுப்பினர் ஜான்பீட்டர், மாநக ராட்சிக்குக் கட்டுப்பட்ட அடிய னூத்து ஒடுக்கம் பகுதியில் மாநக ராட்சிக்கு சொந்தமான ஐநது ஏக்கர்  நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது. இது தொடர்பாக விசாரிக்க வேண் டும் என்று கோரிக்கை வைத்தார். இதற்குப் பதிலளித்த ஆணையர் மகேஸ்வரி விசாரிப்பதாகவும், நட வடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்  திருந்தார்.  அந்தப் பிரச்சனையை திங்க ளன்று மாமன்றக் கூட்டத்தில் பாஜக உறுப்பினர் தனபால் கிளப்பினார். அடியனூத்து ஊராட்சி மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையி லான ஊராட்சி என்பதால் ஊராட்சித் தலைவருக்கு எதிராகப் பிரச்சனை யைக் கிளப்பினார். 

இதற்குப் பதிலளித்த மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்றக் குழுத் தலைவர் எஸ். ஜோதிபாசு, “அடியனூத்து ஊராட்சியில் உள்ள ஒடுக்கம் பகுதி யில் ஊராட்சித்தலைவர் நிலத்தை  ஆக்கிரமித்துள்ளதாக பாஜக உறுப்பினர் கூறுகிறார். அடிய னூத்து ஊராட்சி நிர்வாகம் அது  அவர்களது இடம் என்று சொல் கின்றனர். இது தொடர்பாக ஊராட் சித்தலைவரிடம் பேசினோம்.  அந்த இடம் மாநகராட்சிக்கு சொந்த மான இடம் என்றால் அதற்கான  ஆவணங்களைக் காட்டினால் இடத்தை திருப்பித் தந்துவிடு வார்கள். அந்த இடம் ஊராட்சியின்  கட்டுப்பாட்டில் இளைஞர்களுக் கான விளையாட்டு திடலாகத் தான்  உள்ளது. அந்த இடத்தை ஊராட் சித்தலைவர் ஆக்கிரமித்ததாக கூறு வது சரியல்ல என்றார். தொடர்ந்து பேசிய ஜோதிபாசு, எனது வார்டு பகுதியில் தெரு விளக்குகள் எரிவதில்லை என்று  ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பி ருந்து எழுதிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறோம். ஆனால்  நடவடிக்கை இல்லை. உடனடி யாக தெருவிளக்குகள் எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்  டும் என்று வலியுறுத்தினார்.

மாநகராட்சிக்கு ரூ.5 கோடி இழப்பு 

முன்னாள் ஆணையர் ராஜன் நடவடிக்கை காரணமாக திண்டுக்கல் மாநகராட்சிக்கு ரூ.5  கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ள தாக நிதிக்குழு பரிந்துரைத்துள் ளது. இது தொடர்பாக மாமன்றக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் இரண்டாவது வார்டு உறுப்பினர் கே.எஸ்.கணே சன் பேசிதாவது.  திண்டுக்கல்லில் ஓய்வு பெற்ற  ஆணையாளர் ராஜன் அவர்களால் மாநகராட்சிக்கு ரூ.5 கோடி இழப்பு  ஏற்பட்டுள்ளது என்று நிதித்துறை சுட்டிக்காட்டியுள்ளது. இந்தத் தீர்மா னத்தை ரத்து செய்ய வேண்டும். இது ஒரு மோசமான முன்னுதார ணம். ஆணையாளர் செய்த தவ றுக்கு இந்த மன்றம் பொறுப்பேற் கக் கூடாது. இதை மாவட்ட ஆட்சி யர் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றார்.  மேலும் அவர் பேசுகையில், திண்டுக்கல் மாநகராட்சிப் பொறி யாளர், சுகாதார அலுவலர் பணி யிடங்களை நிரப்ப வேண்டும். மாந கராட்சிப் பகுதியில் போக்கு வரத்தைச் சீர்படுத்த வேண்டும். கரூர் மேம்பாலம் சுரங்கப்பாதை நீண்ட நாட்களாக சரி செய்யப்பட வில்லை. ஆட்சியர் தலைமையில் மேயர், துணை மேயர், அப்பகுதி மாமன்ற உறுப்பினர்கள் கொண்ட சிறப்புக்கூட்டத்தை நடத்தி ரயில்வே சுரங்கப்பாதையை உட னடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.