திண்டுக்கல், ஜுன 27- பழனியில் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தும் வகை யில் கோவில் வளாகத்தில் போராட்டங்கள் நடத்தும் பாஜக மற்றும் சங்பரிவார் கும்பல் மீது காவல்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தொடர் மெத்தனம் காட்டி வருவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரி வித்துள்ளது. இது தொடர்பாக கட்சியின் பழனி நகரச்செயலாளர் கே. கந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: பழனி முருகன் கோவிலில் தேவஸ்தானத்திற்கு சொந்த மான கடைகளில் இஸ்லாமியர்கள் உள்வாடகைக்கு வியா பாரம் செய்து வருகிறார்கள் என்றும், உள் வாடகைக்கு விடுபவர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் தங்கரத கட்டணத்தையும், கால பூஜை கட்டணத்தையும் குறைக்க வேண்டும் என்றும் கோவில் டெண்டர்களை இந்துக்களுக்கே வழங்க வேண்டும் என்றும் கோரி திங்க ளன்று பழனியில் தேவஸ்தான அலுவலகம் முன்பாக அகில பாரத இந்து மகாசபாவைச் சேர்ந்தவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். இந்து சமய அறநிலையத்துறையின் சார்பாக அமைச்சர் சேகர் பாபு இந்த கட்டணங்கள் குறைக்கப் படும் என்று அறிவித்துள்ளார். எனவே அந்த கட்டணங்கள் குறைக்கப்பட்டுவிடும். ஆனால் அதில் ஒரு அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக சங் பரிவார கும்பல்கள் வேண்டும் என்றே போராட்டம் செய்து தாங்கள் தான் குறைக்க வைத்தோம் என்பதற்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். அதுவும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலக வளாகத்திற்குள் சென்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகிறார்கள். மற்றவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினால் அலுவலகத்திற்கு வெளியே நுழைவாயில் முன்பாகத்தான் நடத்துவார்கள். காவல்துறை அதிகாரி கள் அதுவரை தான் அனுமதிப்பார்கள். மனுக்கொடுக்கிறோம் என்ற பெயரில் அலுவலகத்தில் பெரும் ரகளையில் ஈடுபட்டு கோவிலின் அமைதியை கெடுக்கிற வேலையை தொடரச்சியாக பாஜகவினர் மற்றும் சங்பரிவார கும்பல்கள் செய்து வருகிறார்கள். பாஜகவினரின் இந்த நடவடிக்கைகளில் பழனி காவல் துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக வேடிக்கை பார்க்கிறார்கள். பாஜகவின ருக்கு மட்டும் பழனி முருகன் கோவில் சுற்றுவட்டாரப் பகுதியில் எந்த இடத்திலும் ஆர்ப்பாட்டம் செய்யலாம் என்ற நடைமுறையை போலீசார் அனுமதிக்கிறார்கள். இந்த அணுகுமுறை சரியல்ல. திருவிழா காலத்தில் கூட மலைக்கோவிலில் தகராறு செய்தனர். அதே போல் விஞ்ச்சில் தகராறு செய்தனர்.
திரு ஆவினன்குடி கோவி லுக்குள் தகராறு செய்தனர். பழனி தேவஸ்தான அலுவல கத்திற்குள் தகராறு என தொடர்ச்சியாக தகராறு செய்து வருவதை காவல்துறை அதிகாரிகள் வேடிக்கை பார்ப்பது வேதனையாக உள்ளது என்பது மட்டுமல்ல, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் காவல்துறை அதிகாரிகளின் இந்த மெத்தனப் போக்கு பொருத்தமற்றது. மேலும் பாஜகவினர் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள் தொடர் பாக போடப்படும் வழக்குகள் நீதிமன்ற விசாரணைக்கே வருவதில்லை. வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு இவர்களது போராட்டம் பெரும் இடையூறாக உள்ளது. அவர்களை முகம் சுழிக்க வைக்கிறது. ஒரு வித அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. இது தொடர்பாக மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பா ளருக்கு புகார் செய்தால் இது தொடர்பாக ஆய்வாளரி டம் பேசுங்கள் என்கிறார். ஆனால் இங்குள்ள காவல்துறை அதிகாரிகள் பாஜக மற்றும் சங்பரிவார கும்பலுக்கு ஆத ரவாக உள்ளனர். எனவே மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல்த்துறைக் கண்காணிப்பாளரும் பாஜகவினரின் போராட்டங்களை முறைப்படுத்த வேண்டும். இல்லை யெனில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக காவல்துறையின் பாரபட்சமான போக்கைக் கண்டித்து போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.