அன்னா ஹசாரேவை பாஜக பயன்படுத்துகிறது!
“புதிய மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்து இருப்பதாக பாஜக வினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வரு கின்றனர். ஆனால், சிபிஐ விசாரணை யில் ஊழல் நடைபெறவில்லை என்று தெரியவந்துள்ளது. பிரபலமான ஒரு வரை வைத்து தனிநபர் தாக்குதல் நடத்துவது அரசியலில் பொதுவானது தான். பாஜகவும் தற்போது அன்னா ஹசாரேயை வைத்து அதைத்தான் செய்கிறது” என்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள் ளார்.
மணிப்பூரில் ஆதரவை வாபஸ் பெறும் ஜேடியு?
மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பாஜக கூட் டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 60 உறுப்பினர்களில் பாஜக கூட்டணி எம்எல்ஏ-க்களின் பலம் 55 ஆக உள்ளது. இதனிடையே, 6 உறுப்பினர்களைக் கொண்ட நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியிலிருந்து வெளியேறுவது பற்றி ஆலோசித்து வருவதாக கூறப் படுகிறது. பாஜகவுக்கு மட்டுமே 32 உறுப்பினர்கள் உள்ளதால், ஜேடியு முடிவால் ஆட்சிக்கு சிக்கல் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவின் ‘நாரி சக்தியின்’ லட்சணம் இதுதானா?
“2020-ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 2021-ஆம் ஆண்டில் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 15.3 சதவிகிதம் வரை அதிகரித்துள்ள தாக என்.சி.ஆர்.பி.யின் தகவல்கள் சொல்கின்றன. மேலும் பெண்களுக்கு மிகவும் பாது காப்பற்ற நகரமாக தில்லி மாறியுள்ளது. தில்லியில் சட்டம்-ஒழுங்கை ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம்தான் நிர்வகிக்கிறது. இதுதான் பாஜகவினர் நாரி சக்திக்கான விளக்கம்’’ என திரிணா முல் எம்.பி. மஹூவா மொய்த்ரா கூறியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் தேர்தல்: குழப்பும் சசிதரூர்!
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சசி தரூர் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளி யாகின. இந்நிலையில், “அவை ஊகத்தின் அடிப்படையிலானவை” என்று கூறி யிருக்கும் சசிதரூர், “எனினும், தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்ட பிறகே தலைவர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து எதையும் தெளிவாக கூற முடியும்” என்று குழப்பியுள்ளார்.
இவ்வளவு விலைதருவேன் என நினைக்கவில்லை!
பிரதமர் நரேந்திர மோடி முன்பு ஒருமுறை சரத் பவாரின் வழிகாட்டுதலின்படியே தான் அரசி யலுக்கு வந்ததாகவும், அவரது கையைப் பிடித்தே தான் அரசியலுக்கு வந்ததாகவும் கூறி இருந்தார். இந்நிலையில், மோடியின் இந்தக் கூற்றை நினைவுகூர்ந்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “அது இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என ஒரு போதும் நான் நினைக்க வில்லை” என சரத் பவார் பதில் அளித்துள்ளார்.
நண்பர்களை பணக்காரர்கள் ஆக்கும் மோடி!
“ஒவ்வொரு மணி நேரத்திற்கும் தினசரி கூலிக்கு வேலை செய்யும் 5 தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால், ஒவ்வொரு மணி நேரத்துக்கும் பிரதமர் மோடி யின் விருப்பத்திற்குரிய நண்பர் கணக்கில் ரூ.85 கோடி பணம் சேர்கிறது. சாமானியர்களிடம் இருந்து கொள்ளையடித்து தனது நண்பர்களை பணக்காரர்களாக ஆக்குவதே பிரதமரின் ஒரே பணியாகும்” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
காவி ஆட்சியை அகற்றுவதே எனது லட்சியம்!
“2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தோற்கடிக்கப்பட வேண்டும். மத்தியில் காவி கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான போராட்டமே எனது கடைசிப் போராட்டம். பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவேன் என நான் உறுதியளிக்கிறேன்” என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
வேகமாக அதிகரித்த அதானி சொத்து மதிப்பு!
புதுதில்லி, ஆக.31- புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்ட உலகப் பெரும்பணக்காரர்கள் பட்டியலில், அதானி குழும தலைவரும், பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பருமான கவு தம், உலகின் 3-ஆவது பெரும் பணக்கார ராக உருவெடுத்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 137.4 பில்லி யன் டாலர்களாக (ரூ.10 லட்சத்து 82 ஆயிரம் கோடி) உயர்ந்துள்ளது. இதனிடையே, மிகக் குறுகிய காலத்தில் மிக வேகமாக சொத்துக்கள் அதிகரித்த பெரும் பணக்காரர்களின் பட்டியலிலும் அதானி முன்னிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது இரண்டரை ஆண்டுகளில் மட்டும் அதானியின் சொத்து மதிப்புகள் 13 முறை உயர்ந்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவிலேயே அதானியின் சொத்து மதிப்பு இருந்ததாகவும், அது 2022-ஆம் ஆண்டு 60 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியதாகவும், தற்போது அதிரடியாக 137 பில்லியன் டாலர்களை தாண்டியுள்ளதாக வும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஓ.பன்னீர்செல்வத்துடன் சசிகலா தூதர் சந்திப்பு?
சென்னை,ஆக. 31- அதிமுக ஒருங்கிணைப் பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரான பெரிய குளத்தில் தனது ஆதரவா ளர்களை அழைத்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். சசிகலாவுடனும், அ.ம. மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுடனும் இணைந்து செயல்பட ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்து இருக்கிறார். அவர்களை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்க வேண்டும் என்பதில் ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக இருக்கிறார். சசிகலா, டி.டி.வி. தினகரன் இணையும் பட்சத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதர வாளர்களை முழுமையாக ஓரம் கட்ட முடியும் என்று நம்புகிறார். எனவே சசிகலா வையும், டி.டி.வி. தினகர னையும் விரைவில் சந்தித்து பேச ஓ.பன்னீர்செல்வம் திட்டமிட்டு உள்ளார். இதை உறுதிப்படுத்தும் வகையில் ஓ.பன்னீர்செல்வத்தை சசிகலா அனுப்பிய தூதர் ஒருவர் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் அதிகரிக்கும் இனப்பாகுபாடு ஐ.நா அறிக்கை
ஐ.நா, ஆக. 31- கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் வெறுப்புக் குற்றம் மற்றும் வெறுப்புப் பேச்சு நிகழ்வுகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. வெவ்வேறு இனங்களுடன் தொட ர்புடைய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங் களில் உயிர் இழப்புகள் பெரிதும் அதி கரித்துள்ளன என்று அண்மையில் வெளியிடப்பட்ட ஓர் ஐ.நா அறிக்கை யில் சுட்டிக்காட்டப்பட்டது. அமெரிக்கா அனைத்து வடிவத்திலான இனப்பாகு பாடுகளையும் ஒழிப்பது தொடர்பான பன்னாட்டு ஒப்பந்தத்தை நடை முறைப்படுத்தும் நிலைமையை ஐ.நா வின் இனப்பாகுபாடு ஒழிப்பு ஆணை யம் பரிசீலனை செய்து, 30ஆம் நாள் இறுதி அறிக்கையை வெளியிட்டுள் ளது. மருத்துவச் சிகிச்சை, கல்வி, உறைவிடம் முதலிய துறைகளில் அமெரிக்காவிலுள்ள வெள்ளைநிறம் அல்லாதவர்கள் மற்றும் சிறுபான்மை இனத்தவர்கள் முறைப்படுத்தப்பட்ட இனப்பாகுபாட்டை எதிர்நோக்கி வருகின்றனர் என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.