districts

img

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பிறந்த நாள்

தஞ்சாவூர், பிப்.19 - தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கம் சார்பில், விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் மூத்த கம்யூனிஸ்டுமாகிய சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் 162 ஆவது  பிறந்தநாள் தெருமுனைக் கூட்டம் வெள்ளிக் கிழமை தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை அடுத்த ரெட்டவயல் கடைத்தெருவில் நடை பெற்றது.  தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கத் தின் பொதுச் செயலாளர் தங்க.குமரவேல் தலைமை வகித்தார். சிபிஎம் அமரா அழகு  வரவேற்றார். தமிழ்நாடு மக்கள் விடுதலை  இயக்கத்தின் அரசியல் செயலாளர் முனைவர் ஜீவானந்தம் சிறப்புரையாற்றினார்.  சிபிஐ ராஜமாணிக்கம், சிபிஎம் வீ.கருப்பையா, தமிழக மக்கள் புரட்சிக் கழகம்  வீரக்குடி ராசா, தமிழ்நாடு மக்கள் விடு தலை இயக்கம் தங்க.தண்டாயுதபாணி, திராவிடர் கழகம் மகாராஜா ஆகியோர் உரை யாற்றினர். தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கத் தோழர் கேப்டன் அமல்ராஜ் நன்றி  கூறினார். முன்னதாக சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், மறைந்த புரட்சிப் பாடகர் தலித் சுப்பையா ஆகியோரின் உருவப் படங்க ளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப் பட்டது. ‘விவசாயத்தை அழிக்காதே’ என்னும்  துண்டறிக்கை வெளியிடப்பட்டது. கடந்த 31 ஆண்டுகளாக சிறையில் வாடும்  7 தமிழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும். கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் வாடும் அப்பாவி இஸ்லாமியர்களை விடுதலை செய்ய வேண்டும். சலவை, சவரத் தொழிலாளர்களைக் குடியடிமைப் பணியிலிருந்து விடுவிக்க சட்டம் இயற்ற வேண்டும். கிராமப்புற மாணவர்களின் மருத்துவப் படிப்பைப் பறிக்கும் நீட் தேர்வை  ரத்து செய்ய வேண்டும். ரெட்டவயல் கிராமத் தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்திட வேண்டும் என்ற கோரிக்கைகள் பொறிக்கப்பட்ட குடைகளைப் பிடித்தவாறு முழக்கங்கள் எழுப்பப்பட்டது.