districts

img

ஒப்பந்தக்காரருக்கு உரிய இழப்பீடு வழங்காததால் விருதுநகர் ஆட்சியரகம் ரூ.2.35 கோடிக்கு ஏலம்

விருதுநகர், மார்ச் 21- நெடுஞ்சாலைத்துறையின் ஒப்பந்தக் காரருக்கு இழப்பீடு வழங்காத கார ணத்தால் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ரூ.2.35 கோடிக்கு ஏலம் விடப்படுவதாக நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து, விருதுநகர் கூடுதல் மாவட்ட நீதிமன்ற ஊழியர்கள் அறிவிப்பை ஆட்சி யர் அலுவலகத்தில் ஒட்டினர். மதுரை அரசரடியைச் சேர்ந்தவர் அரசு  ஒப்பந்ததாரர் சவரிமுத்து. இவர் கடந்த 1998  இல் காஷ்மீர்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்  சாலையில் திருமங்கலம் சுங்கச் சாவடி  முதல் சாத்தூர் வரை சாலைப் பணிகளை  செய்தார். இவர் 30 சதவீத பணிகளை முடித்த நிலையில் திடீரென வேறு ஒருவருக்கு ஒப்பந்தப் பணிகளை மாற்றி நெடுஞ்சா லைத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனால் இவரது பணிகளுக்கு உரிய பணம் ரூ.3 கோடியே 30 லட்சத்து 40 ஆயிரத்தை வழங்கவில்லையாம்.

இதனையடுத்து சவரிமுத்து, மாவட்ட ஆட்சியர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கள் மீது விருதுநகர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 2002 இல் வழக்கு  தொடர்ந்தார். இந்த வழக்கில் இவருக்கு  உரிய இழப்பீடை வழங்க நீதிமன்றம் உத்தர விட்டது. ஆனால் உரிய இழப்பீடு வழங்கப் படவில்லை. இதனைத் தொடர்ந்து அவர்  சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடந்த  2021 மே 26 இல் ஒரு கோடியே 22 லட்சத்து  97 ஆயிரத்து 686 ஐ, வழக்கு தாக்கல் செய்த  நாள் முதல் 9 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டுமென உத்தரவிட்டனர். அதன் மொத்த தொகை 2 கோடியே  35 லட்சத்து 2 ஆயிரத்து 208 ரூபாய் ஆகும்.  ஆனால், பணத்தை வழங்கக்கோரி நோட் டீஸ் அனுப்பியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து, சவரிமுத்து சார்பில் விருதுநகர் நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி ஹேமானந்த குமார், நோட்டீஸ் அனுப்பியும் பணம் கட்டாத  காரணத்தால், 1 ஆவது பிரதிவாதிக்கு உரிய  அசையா சொத்துக்களை ஜப்தி செய்து அதை ஏலம் விட்டு, அதன் மூலம் கிடைக்கும்  தொகையால் கடனை அடைக்க வேண்டும் என உத்தரவிட்டார். எனவே, நீதிமன்ற பணியாளர் ஜெயக்  குமார் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலு வலக சுவற்றில் ஏல அறிவிப்பு நோட்டீசை  ஒட்டினார். அதில், வரும் மார்ச் 31 ஆம் தேதி  ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள் ளது.