வாலிபர் தற்கொலை
கடமலைக்குண்டு, டிச.16- தேனி மாவட்டம், வருசநாடு அருகே அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கருப்பசாமி என்ற பிரசாத் (வயது 30). இவரது மனைவி தங்கம்மாள். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் இருந்தனர். அதில் இளைய குழந்தை கடந்த 2 வருடங்களு க்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்து போனது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கருப்பசாமியின் மனைவி நெஞ்சு வலி காரணமாக இறந்துவிட்டார். மகன் மற்றும் மனைவி இறந்ததால் சோகத்தில் காணப்பட்ட கருப்பசாமி மதுப்பழக்கத்திற்கு அடிமையா னார். இந்நிலையில் டிசம்பர் 12 ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது மதுவில் விஷத்தை கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டர் அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தொடர்ந்து சிகிச்சை நடைபெற்று வந்த நிலையில் வியாழக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி கருப்பசாமி உயிரிழந்தார். இது தொடர்பாக வருசநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கஞ்சா கடத்த முயன்றவர் கைது
தேனி ,டிச.16- தேனியில் விற்பனைக்கு கஞ்சா கடத்த முயன்ற வாலி பரை கைது செய்த போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் அவரிடமிருந்து 2.250 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர் . தேனி அருகே அரண்மனைப்புதூர் விலக்கு அருகே போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு காவல்துறை சிறப்பு சார்பு ஆய்வாளர் ராஜா ,கஞ்சா தொடர்பாக ரோந்து சென்ற போது, சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரித் தார்.அப்போது அவரிடம் மறைத்து வைத்திருந்த2.250 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது .விசாரணையில் தேனி அருகே அடைக்கம்பட்டியை சேர்ந்த சுருளி மகன் கோபி (26) என்பது தெரியவந்தது. இவரை கைது செய்தனர்.
அதிக வட்டி தருவதாகக் கூறி நிதி மோசடி : நியூ ரைஸ் ஆலயம் குரூப் நிதி நிறுவன தேனி அலுவலக பொருட்கள் பறிமுதல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை
தேனி ,டிச.16- தேனியில் அதிக வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் மோசடியாக முதலீடுக ளைப் பெற்று தலைமறைவான நிதி நிறு வனத்தின் பொருட்களை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு நியூ ரைஸ் ஆலயம் குரூப்ஸ் (பி) லிட் என்ற பெயரில் கடந்த 2020 - 21ஆம் ஆண்டுகளில் தமிழ கத்தின் பல்வேறு இடங்களில் நிதி நிறுவ னம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கள் கூறி பொதுமக்களிடம் இருந்து ஏராள மான முதலீடுகளை பணமாக பெற்று பின்னர் தலைமறைவாகி விட்டனர். இத னால் பாதிக்கப்பட்ட சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த பெண் சந்திரா என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் மதுரை பொ ருளாதார குற்றப்பிரிவில் புகாரளித்தார். அதனடிப்படையில் சிவகங்கையில் இயங்கி வந்த அந்நிறுவனத்தின் பங்குதாரர் கள், இயக்குநர்கள் உள்பட 10-க்கும் மேற் பட்டோர் மீது பொருளாதார குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு,டிசம்பர் 16 அன்று சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் செயல்பட்டு வந்த 23இடங்களில் சோதனை நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக தேனி பவர்ஹவுஸ் தெருவில் இயங்கி வந்த அந்நிறுவனத்தின் அலுவலகத்தை தேனி பொருளாதார குற்றப்பிரிவு ஆய்வாளர் ராஜ நளாயினி தலைமையிலான போலீசார் ஆய்வு செய்து சோதனை நடத்தினர். இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பே அங்கு செயல்பட்டு வந்த நிதி நிறுவனம் தலைமறை வானது தெரியவந்தது.இதையடுத்து அந்த அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள், கணிப்பொறி உபகரணங்கள், பதிவுச் சான்றிதழ்கள் உள்ளிட்டவைகளை கைப் பற்றி பொருளாதார குற்றப்பிரிவு போலீ சார் எடுத்துச் சென்றனர்.
கடமலைக்குண்டு அருகே மூச்சுத் திணறி இறந்ததாக ஓடைப்பகுதியில் புதைக்கப்பட்ட பச்சிளங்குழந்தை சமூக நல அலுவலர் புகாரால் காவல்துறை விசாரணை
கடமலைக்குண்டு, டிச.16- தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே தேவராஜ் நகர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். விவசாயி. இவருடைய மனைவி ரம்யா. ரம்யாவிற்கு கடந்த 29.11.2022 அன்று கடமலைக்குண்டு அரசு மருத்துவ மனையில் பெண் குழந்தை பிறந்தது. 3 நாட்கள் கண்கா ணிப்பிற்கு பின்பு ரம்யா மற்றும் குழந்தை பாலூத்து கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அனுப்பி வைக்கப் பட்டனர். இவர்களுக்கு ஏற்கனவே 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பாலூத்து அங்கன்வாடி பணியாளர், ரம்யாவின் வீட்டிற்கு சென்று அவரிடம் குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்கு அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். ஆனால் 12.12.2022 அன்று குழந்தை மூச்சு திணறி இறந்து விட்டதாக ரம்யா மற்றும் அவரது தாயார் களிச்சியம்மாள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கடமலைக்குண்டு அரசு மருத்துவ மனை செவிலியர்கள், ரம்யா மற்றும் அவரது பெற்றோர்க ளிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது குழந்தை மூச்சு திணறி உயிரிழந்ததாக தெரிவித்தனர். மேலும் குழந்தையின் உடலை வீட்டின் அருகே உள்ள ஓடைப்பகு தியில் புதைத்ததாக தெரிவித்தனர். இதுதொடர்பாக தகவலறிந்த மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் சியாமளாதேவி கடந்த 2 நாட்க ளாக பாலூத்து கிராமத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். விசாரணையின் முடிவில் வெள்ளிக் கிழமை குழந்தை இறந்ததில் சந்தேகம் இருப்பதாகக் கூறி கடமலைக்குண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாரதியார் பிறந்ததின கலை இலக்கிய போட்டிகள்
இராமநாதபுரம்,டிச.16- இராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் கமுதி கிளையின் நாணல் இலக்கிய வட்டம், தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறை, கமுதி முழு நேர கிளை நூலக வாசகர் வட்டம் ஆகியவற்றின் சார்பில் பாரதியார் 140 வது பிறந்ததின விழா, பள்ளி மாணவ- மாணவியர்களுக்கான கலை இலக்கிய போட்டிகள் கமுதி கலா விருத்தி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு தமுஎகச கிளைத் தலைவர் பரமசிவம் தலைமை தாங்கினார். கலாவிருத்தி பள்ளியின் தாளாளர் ஜனாப்.அல்லா பக்ஸ், பள்ளியின் கல்விக்குழு தலைவர் இ.எம். கம்மது இஸ்மாயில், சத்திரிய நாடார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் ரா. முத்துவிஜயன், சத்திரிய நாடார் மெட்ரிக் பள்ளியின் முதல்வர் முனைவர். ஸ்ரீ தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலகர் ஆர்.கண்ணதாசன் வரவேற்றார்.கமுதி தேர்வுநிலை பேரூராட்சியின் தலைவர் அப்துல் வஹாப் ஜகாராணி மாணவர்களுக்கு கலை இலக்கிய போட்டிகளை துவக்கிவைத்தார். இராமநாதபுரம் மாவட்ட மைய நூலகர் அற்புத ஞான ருக்மணி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் குலசேகரப்பாண்டியன், வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கபாண்டியன், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் மாவட்ட செயலாளர் சே.முத்துமுருகன், கே. காளிமுத்து, தமுஎகச மாவட்ட செயற்குழு உறுப்பினர் சக்தி முனீஸ்வரி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தமுஎகச மாவட்ட செயலாளர் மரு.இரா.ஆ. வான்தமிழ் இளம்பரிதி, திரைப்பட நடிகர் ஹலோ கந்தசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கிளைச் செயலாளர் கண்ணதாசன் நன்றி கூறினார்.
இராமேஸ்வரம் - ஹூப்ளி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
மதுரை, டிச. 16- இராமேஸ்வரம் - ஹூப்ளி சிறப்பு ரயில் சேவை மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இராமேஸ்வரம் - ஹூப்ளி - இராமேஸ்வரம் சிறப்பு ரயில் ஜனவரி மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில்களின் சேவை மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஹூப்ளி - இராமேஸ்வரம் வாராந்திர சிறப்பு ரயில் (07355) ஜனவரி 7 முதல் மார்ச் 25 வரை ஹூப்ளியில் இருந்து சனிக்கிழமைகளில் காலை 6.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.15 மணிக்கு இராமேஸ்வரம் வந்து சேரும். மறு மார்க்கத்தில் இராமேஸ்வரம் - ஹூப்ளி வாராந்திர சிறப்பு ரயில் (07356) ஜனவரி 8 முதல் மார்ச் 26 வரை இராமேஸ்வரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழ மைகளில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 7.25 மணிக்கு ஹூப்ளி சென்று சேரும். இந்த ரயில்கள் ஹவேரி, ராணி பெண்ணூர், ஹரிஹர், தேவாங்கீர், சிக்ஜாஜுர், பிரூர், அரிசிகரே, தும்கூர், யெஸ் வந்த்பூர், பனஸ்வாடி, ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, இராமநாதபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருவில்லிபுத்தூர் அருகே 35 மூடை ரேசன் அரிசி பறிமுதல்:ஒருவர் கைது
திருவில்லிபுத்தூர்,டிச.16- விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் தைலாகுளம் பகுதியில் மல்லி காவல்துறை யினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை யிட்டனர். அதில் 35 மூடை ரேசன் அரிசி பண்டல்கள் இருந்தது தெரிய வந்தது உடனடியாக போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த சங்கரன்கோவில் நகர் பாரதியார் தெருவை சேர்ந்த கண்ணன் (வயது 21) என்பவரை பிடித்து விசாரித்தனர். இதில் விருதுநகரில் இருந்து ரேசன் அரிசி கடத்தி கேரளாவுக்கு கொண்டு செல்வதாக கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து கண்ணனை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்டுப்பன்றிகளால் விவசாயம் பாதிப்பு: வனவிலங்கு பட்டியலில் இருந்து காட்டுப்பன்றியை நீக்கிடுக!
தேனி விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தல்
தேனி ,டிச.16- மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி யில் வனவிலங்குகளால் குறிப்பாக காட்டுப்பன்றிகளால் விவசாயம் பாதிக்கப்படுவாகவும் ,வன விலங்கு பட்டியலில் இருந்து காட்டுப்பன்றியை நீக்கி, சுடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தேனி மாவட்ட விவ சாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத் தில் விவசாயிகள் வலியுறுத்தினர் . தேனி மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.வீ. முரளீதரன் தலைமையில் நடை பெற்றது. மேகமலை மண்டல துணை இயக்குநர் எஸ்.ஆனந்த் ,மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் இரா.தண்டபானி, வேளாண்மைத் துறை இணை இயக்கு நர் செந்தில்குமார், பெரியகுளம் வரு வாய் கோட்டாட்சியர் கி.சிந்து, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ) பொ.தனலட்சுமி மற்றும் அனை த்துத்துறை மாவட்ட அளவிலான அலுவலர்கள் மற்றும் ஏராளமான விவ சாயிகள்; மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சி யர், மாவட்டத்தில் ஆண்டு மழை அளவான 829.80 மி.மீ.க்கு இது வரை 1182.58 மி.மீ பெறப்பட்டுள்ளது. இது இயல்பான மழையளவை காட்டிலும் 352.78 மி.மீ அதிகமாகும். டிசம்பர் மாத இயல்பு மழையளவான 56.2 மி.மீ-க்கு தற்பொழுது வரை 40.83 மி.மீ மழை பெறப்பட்டுள்ளது. இது மாத இயல் பான மழை அளவை காட்டிலும் 15.37 மி.மீ குறைவாகும். வேளாண்மை விரிவாக்க மையங்க ளில் நடப்பு பருவத்திற்கு விவசாயிகளு க்கு விநியோகம் செய்யும் பொருட்டு நெல் விதைகள்,சிறு தானியங்கள், பயறு வகைகள் வேளாண்மை விரி வாக்க மையங்களில் இருப்பு வைக்கப் பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் நடப்பு பருவ சாகுபடிக்குத் தேவையான உரங்க ளான யூரியா 1368 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 551 மெ.டன் மற்றும் கலப்பு உரங்கள் 2540 மெ.டன்னும் தனி யார் நிறுவனங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப் பட்டுள்ளது. மேலும், உரம் கிடைப்ப தில் பிரச்சனை, ஒரு உரத்துடன் பிற இணை பொருட்கள் வாங்க நிர்பந்திப் பது மற்றும் அதிக விலைக்கு விற்பனை செய்வது குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் (த.க) அவர்களை 94880 10197 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இக்கூட்டத்தில் உருட்டு தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும் . திராட்சைக்கு அதிகளவில் மானியம் வழங்க வேண்டும் .தமிழக அரசால் உயர்த்தப்பட்ட பால் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர் . தமிழ்நாடு விவசாயிகள் சங்க போடி செயலாளர் இ.மூக்கையா பேசு கையில், உத்தாம்பாறை வன பகுதி யில் விவசாயிகளை வனத்துறையினர் மிரட்டி வருவதாக புகார் தெரிவித்தார்.