districts

img

வெள்ளப்பெருக்கால் கும்பக்கரை அருவியில் குளிக்கத்தடை

தேனி ,டிச.9- பெரியகுளம் மற்றும்  கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வியாழக்கிழமை முதல் பெய்த தொடர் மழை காரணமாக கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவி யில் குளிக்கவும் பார்க்கவும் தடை விதித்து தேவதானப் பட்டி வனச்சரகர் டேவிட் ராஜா தெரிவித்துள்ளார். பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவி யின்  நீர்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல், வட்டக்கா னல் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வந்தது. இத னால் கும்பக்கரை அருவி யில் கடந்த நவம்பர் மூன்றாம் தேதி முதல் வெள்ளப்பெரு க்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.  இதனைத் தொடர்ந்து  கடந்த சில நாட்களாக அரு வியின் நீர் பிடிப்பு பகுதிக ளில் மழை பெய்யாமல் இருந்த நிலையில் அருவி க்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து நீர்வரத்து சீரான தால் 19 நாட்களுக்குப் பின்  23.11.2022 ஆம் தேதி முதல் அருவியில் சுற்றுலா பயணி கள் குளிக்க அனுமதித்து திறக்கப்பட்டது. இதனால் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள்  அருவியில் குளித்து செல்கின்றனர். இந்நிலையில், வியாழக் கிழமை   முதல் தற்பொழுது வரை தொடர்ந்து பெரிய குளம் மற்றும் கொடைக்கா னல் வட்டக்கானல் பகுதிக ளில் மழை பெய்து வருவ தால் கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட் டுள்ளது. எனவே கும்பக்கரை அருவியில் குளிக்கவோ, பார்க்கவோ சுற்றுலா பயணி களுக்கு தடை விதித்து தேவ தானப்பட்டி வனச்சரகர் டேவிட் ராஜா அறிவித்துள் ளார். மறு உத்தரவு பிறப்பிக் கும் வரை தடை தொடரும் என்றும் அறிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் அதிகபட்சமாக சோத்துப் பாறையில் 16 மி மீ ,போடி யில் 6.4 மி மீ மழையளவு பதி வாகியுள்ளது .ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.