விருதுநகர், ஏப்.21- விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஒன்றியம், பி.பாறைப்பட்டி கிராமத்தில் விளை நிலங்களின் நடுவே தனியார் கல்குவாரி அமைக்க மாவட்ட நிர்வா கம் அனுமதியளித்ததை இரத்து செய்திடக்கோரி தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகாசி ஒன்றியத்திற்கு உட்பட்டது பி.பாறைப்பட்டி கிராமம்.இங்கு சுமார் 300 ஏக்கரில் பருத்தி, கத்தரி, மக்காச் சோளம் உள்ளிட்ட விவசாயம் செய்யப் பட்டு வருகிறது. 25க்கும் மேற்பட்ட பம்ப் செட் விவசாயம் உள்ளது. இந்நிலை யில், விளை நிலங்களின் நடுவே கல் குவாரி அமைக்க கடந்த 2020 ஆம் ஆண்டு புவியியல் மற்றும் சுரங்கத் துறை அனுமதியளித்தது. ஆனால், வாகனங்கள் இந்த பகுதிக்கு செல்ல பாதை வசதிகள் கிடையாது. மேலும், அங்கு கல்குவாரி அமைந்தால் விவசா யம் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, விதிமுறை களை மீறி தனியார் கல்குவாரி அமைக்க கூடாது என தொடர்ந்து விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், மீண்டும் அதே இடத்தில் கல்குவாரி அமைக்க பல்வேறு முயற்சிகள் தொடர்ந்து நடை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
எனவே, குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சிமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், இதனைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைமையில் கிராம மக்கள் ஒன்றி ணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இப்போ ராட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் முத்தையா தலைமையேற்றார். துவக்கி வைத்து மாவட்டச் செயலாளர் வி.முருகன் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் பி.பாலசுப்பிர மணியன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.முடிவில் மாவட்டத் தலை வர் அ.விஜய முருகன் கண்டன உரை யாற்றினார். மேலும் இதில், ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பம், சிபிஎம் கிளை செயலாளர் ஜெயக்கொடி, சங்கரய்யா, மாரிச்சாமி,முத்துச்சாமி மற்றும் பாறைப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஊர்த் தலைவர்கள் இராமர் போதைராஜன், முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.