சாலை விபத்தில் ஒருவர் பலி
நத்தம், செப்.6- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கோம ணாம்பட்டியை சேர்ந்தவர் சின்னழகன். இவரது மகன் பிரகாஷ்ராஜ் (20). இவர் கடந்த 3-ஆம் தேதி கோமணாம் பட்டியிலிருந்து இருசக்கர வாகனத்தில் மதுரை முடக்கு சாலை பகுதிக்கு வந்துள்ளார். அப்போது அவரது பின்னால் வந்த கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட பிரகாஷ்ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காவல் துறையினர் விசாரிக்கின்றனர்.
செப்.8- இல் எரிச்சநத்தம் பகுதியில் மின் தடை
விருதுநகர், செப்.5- விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் துணை மின் நிலை யத்தில் மாதாந்திரப் பரமாரிப்புப் பணிகள் வரும் செப். 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே, அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குமி ழங்குளம், நடையநேரி, கிருஷ்ணமநாயக்கன்பட்டி, அம்மா பட்டி, பாறைப்பட்டி, வடக்கம்பட்டி, அ.பாறைப்பட்டி, செங்குளம், சிலார்பட்டி, முருகனேரி, அ.கரிசல்குளம், அக்கனாபுரம், கோட்டையூர், இலந்தைக்குளம், அழகா புரி, ஆயர்தர்மம், சுரைக்காய்பட்டி, சுப்புலாபுரம், கொண் டையம்பட்டி மற்றும் கோவிந்த நல்லூர் ஆகிய பகுதி களில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
கத்திக்குத்து: இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை
தேனி, செப்.5- போடியில் காதலியைத் திருமணம் செய்து வைக்க முயன்றதாக வாலிபரைக் கொலை செய்ய முயன்ற காத லன் உட்பட இருவருக்கு பேருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது தேனி மாவட்டம் போடி திருமலாபுரத்தைச் சேர்ந்த சுருளிராஜ்(37) இவரது தம்பிக்கு திருமண ஏற்பாடு செய்து கொண்டிருந்தார். மணப்பெண்ணை போடி அணைக் கரைப்பட்டியை சேர்ந்த கார்த்திக் என்பவர் காதலித்து வந்துள்ளார். இதனால் கோபமடைந்த கார்த்திக், சுருளிராஜை “என் காதலிக்கு உனது தம்பியை எப்படி திருமணம் செய்து கொள்ளப் பேசலாம்” எனக் கூறி, தனது நண்பர் சுகுமாரு டன் சேர்ந்து கடந்த 2013-ஆம் ஆண்டு அக்டோபர் 17-ஆம் தேதி சுருளி ராஜைக் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றார். இதில் படுகாயமடைந்த காயமடைந்த சுருளி ராஜ் சிகிச்சைக்குப் பின் குணமடைந்தார். இது குறித்து போடி நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இரு வரையும் சிறையிலடைத்தனர். இது தொடர்பான வழக்கு தேனி மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. திங்களன்று விசாரணை முடிந்த நிலையில் இரு வருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி வி.சுரேஷ் உத்தரவிட்டார்.
மனைவி கொலை: கணவர் கைது
மதுரை, செப்.5- மதுரை மாவட்டம் கருங்காலக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த நல்லையன் மற்றும் அவரது குடும்பத்தினர் நாடோடிகளாக வசித்து வருகின்ற னர். திங்களன்று இரவு நல்லையனுக்கும், அவரது மனைவி கலா (45)- விற்கும் மதுபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, நல்லையன் மனைவி கலா வை கல்லால் தலையில் தாக்கியுள்ளார். இதில் கலா உயிரிழந்தார். கொட்டாம்பட்டி காவல்துறையினர் விசா ரிக்கின்றனர்.
கிரஷரில் சிக்கி பெண் பலி
தேனி, செப்.5- ஆண்டிபட்டி அருகே தனியார் கிரஷரில் சிக்கி பெண் பலியானது குறித்து க.விலக்கு காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள முத்த னம்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த சேகர் மனைவி சிவ னேஸ்வரி. (50). இவர் வைகை அணை சாலையில் உள்ள எம்.ஆர்.சி கிரஷரில் வேலை பார்த்து வந்தார். சம்ப வத்தன்று அவர் பணியிலிருந்தபோது இயந்திரத்தில் சேலை இறுக்கி கீழே விழுந்தார். இதில் கழுத்து இறுக் கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சின்னாளபட்டி அருகே இருவர் பலி
சின்னாளபட்டி, செப்.5- சின்னாளபட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இரு வர் பலியாயினர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த வர் பிரகாஷ்ராஜ் (22) இவரும், திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியை அடுத்த வெள்ளோடு பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார் (25) நண்பர்களான இருவரும் இருசக்கர வாகனத்தில் வாடிப்பட்டியிலிருந்து திண்டுக் கல் நோக்கி நான்கு வழிச் சாலையில் வந்து கொண்டி ருந்தனர். காந்திகிராமத்தை அடுத்த செட்டியபட்டிபகுதியில் வந்து கொண்டிருந்தபோது அதே திசையில் வந்த டிப்பர் லாரி இவர்கள் வந்த இருசக்கர வாகனம் மீது மோதி யது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். அம்பாத்துறை காவல்துறையினர் விசாரித்தனர்.
போலி நகையை அடகு வைத்தவர் கைதுபோலி நகையை அடகு வைத்தவர் கைது
விருதுநகர், செப்.5- விருதுநகரில் போலி நகையைத் தனியார் நிறு வனத்தில் அடகு வைக்க வந்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மீனாம்பிகை பங்களா அருகே உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் உதவி மேலாளராகப் பணி புரிந்து வருபவர் ராஜ்குமார். இவர் வழக்கம் போலப் பணி செய்து கொண்டிருந்தார். அப்போது, வந்த ஒருவர் நான்கரை பவுன் எடையுள்ள நகையை அடகு வைக்க வேண்டுமென ராஜ்குமாரிடம் தெரிவித்துள்ளார். அதை வாங்கி பரிசோதித்த ராஜ்குமார் அது போலியானது என்பதை அறிந்து மேற்கு காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தார். அவர்கள் உடனடி யாக வந்து போலி நகையை அடகு வைக்க முயன்ற தென்காசி மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்த விக்னேஷ்குமார்(24) என்பவரைக் கைது செய்தனர்.
நியாமேக்ஸ் நிறுவன மோசடி புகாரளிக்க சிறப்பு முகாம்
மதுரை, செப்.5- மதுரை நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க ஏதுவாக வெள்ளிக்கிழமை சிறப்பு முகாம் நடைபெறுவதாகப் பொருளாதாரக் குற்றப்பிரிவு சார்பில் தெரி விக்கப்பட்டுள்ளது. மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த நியோமேக்ஸ் நிதி நிறுவனம் ஏராளமானோரிடம் கோடிக்கணக்கான ரூபாய்களை முதலீடாகப் பெற்றுத் திரும்பத்தராததால் பாதிக்கப் பட்டவர்கள் பொருளாதாரக் குற்றப்பிரிவில் புகாரளித்தனர். அதன்பேரில் காவல்துறை நிதி நிறுவன இயக்குநர்கள் உட்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ள னர். மற்றவர்களைத் தேடி வருகின்றனர். இந்நிலையில் நியோ மேக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டுள்ள முதலீட்டா ளர்கள் புகாரளிக்க வசதியாக ஏற்கெனவே மதுரை, விருதுநகரில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதில் ஏராளமானோர் புகாரளித்துள்ளனர். இந்தநிலையில் நியோமேக்ஸ் நிதி மோசடி தொடர்பான வழக்கில், நியோமேக்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஐந்து பிரதான நிறுவனங்கள் மற்றும் 20 துணை நிறுவனங்களில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் புகார் அளிக்க வசதியாக வெள்ளிக்கிழமை (செப்.8), மதுரை ஆயுதப்படை மைதானத்தில் சிறப்பு முகாம் நடை பெறவுள்ளதாகப் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரி வித்துள்ளனர். பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் தங்கள் மனுக்களை அனைத்து தொடர்புடைய ஆவணங்களுடன் (நகல்கள்) மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெறும் சிறப்பு முகா மில் புகாரளிக்கலாம். மேலும் கூடுதல் தகவல்களுக்குப் பொருளா தாரக் குற்றப்பிரிவு அலுவலக தொலைபேசி எண் : 0452 2642161, காவல் ஆய்வாளர் ராஜநளாயினி- 96006 72735, பொருளா தாரக்குற்றப்பிரிவு கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா-94981 45689 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
பாலகிருஷ்ணாபுரம் ரயில்வே பாலம் பிரச்சனை: வழக்குத் தொடுத்தவர் வீடு இடிப்பு
திண்டுக்கல், செப்.5- திண்டுக்கல் பால கிருஷ்ணாபுரம் ரயில்வே மேம்பாலத்திற்காக உயர் நீதிமன்ற உத்தரவுப்படி முருகவேல் என்பவரின் வீட்டை காவல்துறை பாது காப்புடன் வருவாய்த் துறை யினர் இடித்தனர். திண்டுக்கல்லில் இருந்து சிலுவத்தூர் செல்லும் சாலை யில் பாலகிருஷ்ணாபுரம், காட்டுமடம், அதிகாரிப்பட்டி, ராஜக்காபட்டி, பில்லம நாயக்கன்பட்டி, திருமலைக் கேணி, செங்குறிச்சி, கம்பி லியம்பட்டி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிரா மங்கள் உள்ளன. இந்தக் கிரா மங்களுக்கு பாலகிருஷ்ண புரத்தைக் கடந்து தான் செல்ல வேண்டும். பாலகிருஷ்ணாபுரத்தில் திண்டுக்கல்-சென்னை, திண்டுக்கல்-பழனி, திண்டுக் கல்-கரூர் என அடுத்தடுத்து மூன்று ரயில் பாதைகள் உள்ளன. மூன்று ரயில் பாதைகளிலும் அடிக்கடி ரயில்கள் செல்வதால் கேட் கள் மூடப்படுகின்றன. இத னால் புறநகர்ப் பகுதியில் உள்ள கிராமங்களுக்குச் செல்லும் மக்கள் ரயில்வே கேட்டில் சிக்கி காலதாமதமா கச் செல்லக்கூடிய நிலைமை பல ஆண்டுகளாக இருந்து வந்தது. அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2013-ஆம் ஆண்டு ஒன்றிய- மாநில அரசுகள் மூன்று ரயில் பாதைகளையும் தடையின்றி கடந்து செல்லும் வகையில் நீண்ட மேம்பாலம் அமைக் கத் திட்டமிட்டது. தொடர்ந்து திண்டுக்கல் நகர் எல் லைக்கு உட்பட்ட பகுதி களில் 23 பேரிடமும், பால கிருஷ்ணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 72 பேரி டமும் நிலம் கையகப்படுத் தும் பணி தொடங்கியது. அப்பொழுது அரசு வழங்கும் இழப்பீட்டுத் தொகை போதாது எனக் கூறி ஒரு சில நில உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். சம்மந்தப்பட்ட நபர்களி டம் மாவட்ட நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்தி நிலத்தைக் கையகப்படுத்த எட்டு ஆண்டுகள் ஆனது. கடந்த இரண்டு வருடங்க ளாக ரயில்வே மேம்பாலப் பணிகள் துரிதமாக நடை பெற்று தற்பொழுது 99 சத வீத பணிகள் நிறைவடைந துள்ளது. பாலம் விரைவில் திறக்கப்படும் என எதிர் பார்த்த நிலையில் முருக வேல் என்ற மாற்றுத்திற னாளியின் இடத்திற்கு அரசு ரூ.3.5 லட்சம் மட்டுமே இழப் பீடு வழங்க முன் வந்ததால் அவர் அதை வாங்க மறுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார். முருகவேலுக்கு, மாவட்ட நிர்வாகம் உரிய இழப்பீட்டை வழங்கிவிட்டு அவரது வீட்டை இடிக்க உத் தரவு பிறப்பித்தது. முருக வேல் அரசு சார்பில் வழங் கப்பட்ட இழப்பீட்டை வாங்க மறுத்ததால் இழப்பீட்டுத் தொகை சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் செலுத்தப்பட்டது. இதையடுத்து மாவட்ட வருவாய்த் துறையினர் காவல்துறை பாதுகாப்புடன் முருகவேலின் வீட்டை இடித் தனர். இதற்கு அவரது குடும் பத்தினர் எதிர்ப்புத் தெரி வித்தனர். தொடர்ந்து முருக வேல் கைது செய்யப்பட்டார். இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவ தாகப் பாதிக்கப்பட்ட அவர் தெரிவித்தார்.
‘மக்கள் பார்த்துக்கொள்வார்கள்’
திண்டுக்கல், செப்.5 சுதந்திரப் போராட்டத் தியாகி வ.உ.சிதம்பரனாரின் 152வது பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல்-திருச்சிராப்பள்ளி சாலை யில் அமைந்துள்ள அவரது சிலைக்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அமைச்சர் உதய நிதி தெரிவித்த ஒரு கருத்தை (சனாதனம் ஒழிப்பு) அரசியலாக்கி ஆதா யம் அடைய ஒரு கூட்டம் முயற்சிக்கிறது. அதை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்” என்றார்.