districts

img

வளர் வழக்கறிஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்

தருமபுரி, டிச.19- தருமபுரி அரசு சட்டக்கல்லூரி யில் வளர் வழக்கறிஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடை பெற்றது. தமிழ்நாடு சமூக நலம் மற்றும் மகளிர் மேம்பாடு, தொண்டு நிறுவ னங்களான தோழமை, சிசிஆர்டி மற்றும் யூனிசெப் ஆகியவற்றின் உதவியோடு தருமபுரி சட்டக்கல் லூரி நிர்வாகம் சார்பில் வளர் வழக் கறிஞர்களுக்கான விழிப்புணர்வு கருத் தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி யில் தருமபுரி சட்ட கல்லூரி முதல்வர் சிவதாஸ் வரவேற்புரையாற்றினார். தோழமை தொண்டு நிறுவனத்தின் தேவநேயன் கருத்தரங்கம் குறித்து அறிமுக உரையாற்றினார். இதில், ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியின் துறை தலைவர் லூர்துசாமி, தருமபுரி சிறார் நீதி வாரியத்தின் உறுப்பினர் சரவணன், சென்னை சிசிஆர்டி நிறு வனத்தின் இயக்குநர் ஸ்டிக்னா ஜென்சி, தருமபுரி ரியல் பவுண்டே சன் நிறுவனத்தின் இயக்குநர் செந் தில் ராஜா, தருமபுரி சிறார் பாதுகாப்பு அலுவலர் செல்வம் ஆகியோர் சிறப் புரையாற்றினர். இதைத்தொடர்ந்து , தமிழகத்தில் தற்போது நடந்து வரும் சிறார்க ளுக்கு எதிரான குற்றங்கள் ‌குறித்து  சிசிஆர்டி நிறுவனத்தின் மூத்த ஒருங் கிணைப்பாளர் கிருஷ்ணவேணி மற்றும் பூரணி ஆகியோர் உரையாற் றினர். சிறார்களுக்கான சட்டங்கள் குறித்து வழக்கறிஞர் சுபா தேன் பாண்டியன் பேசினார். இறுதியில் தருமபுரி சட்ட கல்லூரியின் உதவி பேராசிரியர் ரேகா நன்றி கூறினார்.