திண்டுக்கல், ஜுலை 12- திண்டுக்கல்லில் தீக்கதிர் சந்தா சேகரிப்பில் ஆட்டோ தொழிலாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வரு கிறார்கள். திண்டுக்கல் புனித மரியன்னை துவக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அருள் பென்னடிக் நாதன், ஐக்கிய முஸ்லீம் முன்னேற்றக்கழகத்தின் மாநில செயலாளர் ஜமால், கணேஷ் தியேட்டர் அருகில் உள்ள தோழர் என்.வரதராஜன் நினைவு ஆட்டோ நிலையத்தின் சார்பாக தீக்கதிர் சந்தாக்களை ஆட்டோ தொழிலாளர் சம்மேள னத்தின் மாநில பொதுச்செயலாளர் எம்.சிவாஜியிடம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாவட்டச்செயலாளர் என். பாண்டியன், மாவட்ட துணைத்தலைவர் என்.கோபி நாதன், சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் எம்.பழனிச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.