சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பாதரக்குடி ஊராட்சியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ஆதிதிராவிடர் காலனியில் ரூ.04.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள சமையல் அறை கட்டிடத்தினை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜீத் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் கல்லல் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சொர்ணம் அசோகன், ஒன்றியக்குழு உறுப்பினர் வே.மருதுபாண்டியன், ஊராட்சி மன்றத்தலைவர் பாண்டிமீனாள் (பாதரக்குடி), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செழியன், திருப்பத்தூர் வட்டாட்சியர் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.