districts

img

வசனகர்த்தா ஆரூர்தாசுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை விருது

சென்னை, ஜூன் 3- 2022ஆம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதிற்காக பலநூறு திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதிய புகழ்பெற்ற வசனகர்த்தா ஆரூர்தாஸ் (90) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நடிகருக்கென்று தனிபாணி கொள்ளாமல்,  தன்னை முன்னிறுத்தாமல், கதா பாத்திரம் அறிந்து உணர்ந்து, வசனம் எழுதி, தான் பங்காற்றிய படங்களுக்கு செழுமை சேர்த்தவர்.    திருவாரூர் மாவட் டத்தில் பிறந்த ஆரூர்  தாஸ், முன்னணி நடி கர்கள்,  நடிகைகள் உள்ளிட்டோர் நடித்த 1,000  திரைப்படங்களின் உரையாடலில் அழுத்தமான பங்கு வகித்தவர். 60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் திரையுலகில் நெடியப் பணிப்புரிந்த  அனு பவம் ஒரு சாதனையாகும். கலைஞர் பிறந்த தின மான ஜூன் 3 அன்று ஆரூர்தாசுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதும், பரிசுத் தொகை ரூ. 10 லட்சமும், வழங்கப்படுகிறது.