districts

img

மதுரை, விருதுநகரில் அனைத்து சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை/விருதுநகர், அக்.3- லக்கிம்பூர்-கெரியில் விவசாயி களை கார் ஏற்றி கொலை செய்த ஒன்றிய அமைச்சரின் மகன் மீது நடவடிக்கை எடுக்காத பாஜக அர சைக் கண்டித்து மதுரை, விருது நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ஆர்ப்பாட்டத்தில் சம்பந்தப்  பட்டவர்களைக் கைது செய்ய  வேண்டுமென வலியுறுத்தப் பட்டது. மதுரையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் இரா.தெய்வராஜ், இரா.லெனின் (சிஐடியு), எஸ். மக பூப்ஜான் (எம்எல்எப்), கோபிநாத் (ஐஎன்டியுசி), தாமஸ் (ஏஐடியுசி), சி.கருணாநிதி (எல்பிஎப்), வி. பாதர் வெள்ளை (எச்எம்எஸ்) உட் பட ஏராளமானோர் பங்கேற்றனர். விருதுநகரில் விவசாயிகள் கூட்டமைப்பு- தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்திய போராட் டத்தில் வி.முருகன், காளிராஜ், விஜயமுருகன், மனோஜ்குமார் (விவசாயிகள் சங்கம்), எம்.மகா லட்சுமி, பி.என்.தேவா, ஜி. வேலுச்சாமி (சிஐடியு), ராஜசெல் வம், அண்ணாத்துரை (எல்பிஎப்) உட்பட ஏராளமானோர் பங்கேற்ற னர், மதுரை யா.ஒத்தக்கடையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏ. வேல்பாண்டி, எஸ்.பி. இளங்கோ வன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்), வி.உமாமகேஸ்வரன், பி.ஆறுமுகம் (அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம்), செ.கண்ணன், கே.அர விந்தன், எம்.பாலசுப்பிரமணியன், ஆர்.மனோகரன் (சிஐடியு) உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.