districts

img

நடத்தி வருகின்றனர். பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஒரு அறை சேதம்

சிவகாசி, அக்.13- விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள  ஆண்டியாபுரம் பகுதியில் விஜய் ஆனந்த் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வரு கின்றனர்.   இந்நிலையில் வழக்கம் போல தொழிலாளர்கள் பட்டாசுகள் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அறை எண் 23 ல் சோர்சா வெடிகள் தயார் செய்யும் போது எதிர்பாராத விதமாக தரையில் உராய்வு ஏற்பட்ட திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.  இதையடுத்து, பணியில் இருந்த தொழிலாளர்கள் சுதாரித்துக் கொண்டு ஆலையை விட்டு வெளியேறினர். இந்த விபத்தில் அந்த அறை முழுவதும் சேதமாகியது. தகவலறிந்து விரைந்து வந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்தனர். மேலும், பிற அறைகளுக்கு தீ பரவாமல் தடுத்தனர். விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.