districts

img

கல்வி, தேர்வு பிரச்சனை தொடர்பாக எப்போதும் தொடர்பு கொள்ளலாம்: சு.வெங்கடேசன் எம்.பி.,

மதுரை, செப்.1- மதுரை மேலூரை சேர்ந்த மாணவர் லோகேஸ்வர் மத்  திய பல்கலைக்கழக நுழைவு தேர்வில் பங்கேற்க லட்சத் தீவில் தேர்வு மையம் ஒதுக்  கீடு செய்யப்பட்டது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் முயற்சியால் தேர்வு மையம் லட்சத்தீவிலிருந்து மது ரைக்கு மாற்றப்பட்டது. இத னையடுத்து மாணவர் லோகேஸ்வர் கீழக்குயில் குடியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக கிளை கல் லூரியில் உள்ள மையத்தில் தேர்வு எழுதிவிட்டு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசனை தனது  குடும்பத்துடன் நேரில் சந் தித்து நன்றி தெரிவித்தார்.  பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களை சந் தித்து கூறுகையில் “ மாண வர்களின் கல்வி சார்ந்த பிரச்  சனைகளுக்கு குரல் கொடுத்து  வருகிறோம், மதுரை மாண வர் லோகேஸ்வருக்கு கடும் முயற்சிக்குப் பின் 7 மணி நேரத்தில் தேர்வு மையம் மாற்றப்பட்டுள்ளது, மத்திய உயர்க்கல்வித்துறை, தேசிய தேர்வு முகமை, திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணை வேந்தர் ஆகியோ ரின் நடவடிக்கைகளால் தேர்வு மையம் மாற்றப்பட்  டுள்ளது, கல்வி, தேர்வு சார்ந்த பிரச்சனைகள் தொடர்பாக என்னை எப் போதும் வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம், ஒன்றிய அரசு மண்டலம்  வாரியாக தேர்வுகளை நடத்த வேண்டும் .மாண வர்கள் பேருந்து விபத்து களில் உயிரிழப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண் டும், மாணவர்களுக்கு தேவையான நேரத்தில் கூடு தல் பேருந்துகளை இயக்க வேண்டும். மதுரை - கோவை இடையே அகல  இரயில்பாதையாக மாற்றப் பட்டு 5 ஆண்டுகளுக்கு பின் இரயில் சேவை செப்டம்பர் 1 ஆம் தேதியிலிருந்து இயக்கப்படுகிறது.  இவ்வாறு அவர் கூறி னார். பேட்டியின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.  கணேசன், மாணவர் லோகேஸ்வர்,அவரது தந்தை சிவக்குமார், தாயார்  தவமணி ஆகியோர் உட னிந்தனர்.