districts

img

பாஜக ஊடகத்தொடர்பாளர் திருப்பதி நாராயணனைக் கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்

ரயில் பயணத்தில் பிரதமர் மோடியை விமர்சித்த முதிய பயணியை மிரட்டியதையும் இதனை தட்டிக்கேட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜையும் மிரட்டிய பாஜக ஊடகத்தொடர்பாளர் திருப்பதி நாராயணனைக் கண்டித்து  பழனியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட துணைத்தலைவர் கே. அருள்செல்வன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மாவட்ட செயலாளர் கே. டி. கலைச்செல்வன், மாவட்ட பொருளாளர் ஆர். வனஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கமலக்கண்ணன்  ஆகியோர் பேசினர்.