districts

கணக்கில் காட்டாத பணம் ரூ.98,800 பறிமுதல் சார்பதிவாளர் மீது வழக்குப் பதிவு

மதுரை, நவ.3- மதுரை மாவட்டம், செல்லம்பட்டி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் நடத்திய  சோதனையில் ரூ. 3.39 லட்சம் பறிமுதல் செய்யப் பட்டது.  மதுரை மாவட்டம் செல்லம்பட்டியில் செயல்பட்டு வரும் சாா்- பதிவாளா் அலுவலகத்தில் பொறுப்பு சாா்-பதிவாளராகப் பணியாற்றும் பி.செல்வி (59), பதிவு செய்ய முடியாத பத்திரங்களுக்கு ரூ. 10 ஆயிரம் லஞ்சமாகப் பெற்று பதிவு செய்து வருவதாக, மதுரை ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படை யில், ஊழல் தடுப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் சத்தியசீலன் தலைமையிலான காவல்துறையினர் அங்கு வியாழக்கிழமை இரவு சோதனையில் ஈடுபட்டனா். இந்தச் சோதனையின் போது, பொறுப்பு சாா்-பதிவாளா்  செல்வியிடம் இருந்து கணக்கில் வராத ரூ. 90,800 செல்விக்கு  கொடுப்பதற்காக வைத்திருந்தாக செல்லம்பட்டியைச் சோ்ந்த பதிவு பெறாத பத்திர எழுத்தா் ராமச்சந்திரன் என்பவ ரிடமிருந்து ரூ.2.48 லட்சம் என மொத்தம் ரூ.3.39 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், மதுரை ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர், மதுரை மாவட்டம் சிந்துப்பட்டியைச் சேர்ந்த கே.ராமச்சந்திரன் (33) என்ற பதிவு செய்யப்படாத ஆவண எழுத்தாளரிடம் இருந்து மேலும் ரூ.2.48 லட்சத்தை கைப்பற்றினர். பணம் வசூலிக்க ராமச்சந்திரன் என்பவரை பயன்படுத்திக்கொண்டதையும் அவர் ஒப்புக்கொண்டார். லஞ்சம் வசூலிக்கும் ராமச்சந்திரன் அதை அலுவலகத்திற்கு வெளியே செல்வியிடம் ஒப்படைப்பது வழக்கம் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.