மதுரை, அக்.13- மதுரையில் மேல் அதிகாரி களின் நடவடிக்கையால் மன உளைச்சலுக்கு ஆளான அங்கன்வாடி ஊழியர் அம்ச வள்ளி அக்டோபர் 9 அன்று தற்கொலை செய்து கொண் டார். இவரது மரணத்திற்கு நீதி கேட்டும், அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங் கத்தின் தலைவர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வரதலட்சுமி, பொருளாளர் ரமேஸ்வரி, மாநில நிர்வாகிகள் நாகலெட் சுமி, சாந்தி, சிஐடியு மாவட்டத் தலைவர் ஆர்.தெய்வராஜ், செயலாளர் இரா.லெனின் உட்பட சுமார் ஆயிரக்கணக் கான அங்கன்வாடி ஊழியர் கள் கலந்து கொண்டனர்.