districts

img

ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் தொடக்கம்

திருவில்லிபுத்தூர், மார்ச் 10-  திருவில்லிபுத்தூர்  ஆண்டாள் திருக் கல்யாண உற்சவம் மார்ச் 10 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.ரகுராமன் பட்டர் கொடியேற்றி வைத்தார். விழாவில் முக்கிய பிரமுகர்கள், ஏரா ளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  மார்ச் 18 அன்று காலையில் செப்புத் தேரோட்டமும், இரவு 7 மணிக்கு ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார் திருக் கல்யாணமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்து ராஜா ஆகியோர் செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் மணவாள மாமுனி கள் மடத்தின் ஜீயர் ஸ்ரீ சடகோபராமனுஜ ஜீயர், நகராட்சி ஆணையாளர் மல்லிகா, சிவகாசி தொழிலதிபர் பாலசுப்பிரமணி யன், பட்டர்கள் முத்து, ரமேஷ், சுதர்சன், கோபிமணியம் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.