மதுரை, நவ.10- மதுரை மாவட்டம், திருமங்க லம் அருகே அழகுசிறை கிரா மத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்ச ரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 5 லட்சம் வழங்க உத்தர விட்டதை தொடர்ந்து வணிகவரி-பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி அழகுசிறை கிராமத்தில் இறத்தவர்களின் குடும்பத்தின ருக்கு ரூபாய் 5 இலட்சத்திற்கான காசோலையினை நவம்பர் 10 அன்று வழங்கினார். பின்னர் அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகை யில், மதுரை மாவட்டம், திருமங்க லம் அருகே அழகுசிறை கிராமத் தில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் இன்றைய தினம் திடீ ரென வெடிவிபத்து ஏற்பட்டது. இது குறித்த தகவல் முதலமைச்சரின் கவனத்திற்கு சென்றவுடன், அமைச்சர் என்ற முறையில் உட னடியாக சம்பவ இடத்திற்கு நேர டியாக சென்று மீட்புப் பணிகளை துரிதப்படுத்திட உத்தரவிட்டார். அதனடிப்படையில், வெடிவிபத்து ஏற்பட்ட ஆலையில் நேரடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த துயர சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்த வர்கள் திருமங்கலம் அரசு மருத்து வமனையிலும், மதுரை அரசு ராசாசி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.5 இலட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இச் சம்பவம் குறித்து விசாரணை மேற் கொள்ளப்பட்டு வருகிறது. அரசு வரையறுத்துள்ள விதிமுறைகளை சம்பந்தப்பட்ட பட்டாசு ஆலை நிர்வாகம் முறையாக பின்பற்றி யதா, விதிமீறல் ஏதும் உள்ளதா என்பது குறித்து விசாரணையின் முடிவில் தெரிய வரும். அதனடிப்ப டையில் உரிய நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்று தெரிவித்தார். தொடர்ந்து, அமைச்சர் பி. மூர்த்தி திருமங்கலம் அரசு மருத்து வமனை மற்றும் மதுரை அரசு ராசாசி மருத்துவமனைக்கு நேரடி யாக சென்று வெடிவிபத்தில் காய மடைந்து சிகிச்சை பெற்று வரு பவர்களை நேரில் சந்தித்து ஆறு தல் கூறினார். மேலும், அவர் களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்ட றிந்து சிறப்பு சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தி னார். இந்த நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.அனீஷ் சேகர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன் , மாவட்ட வருவாய் அலுவலர் ர. சக்திவேல் உள்ளிட்ட அரசு அலு வலர்கள் உடனிருந்தனர்.