மதுரை, மார்ச் 20- மதுரை-நத்தம் சாலை மேனேந்தல் மைதானத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் 70 ஆண்டுகால பொது வாழ்க்கை குறித்த புகைப் படக் கண்காட்சியை வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி முன்னி லையில், மீனாட்சி சுந்தரேசு வரர் திருக்கோவில் தக்கார் கருமுத்துகண்ணன் திறந்து வைத்தார். ஒரு தலைவரானவர் எப் படி ஒரு பாதையை கடந்து வரவேண்டும். கூரையை பொத்துக்கொண்டு வர முடி யாது படிப்படியாக எப்படி வரவேண்டும் எப்படி உயர்ந் திருக்க வேண்டும் ஒவ் வொரு பொறுப்புகளையும் எப்படி ஏற்றிருக்கிறார் என் பதை காணும்போது உற்சா கத்தை கொடுக்கும். இக்கண் காட்சியைப் பார்க்கும் போது நாமும் இப்படி வரமுடியாதா என்ற எண்ணம் வரும் என் றார் கருமுத்துகண்ணன். வணிகவரி மற்றும் பதி வுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி கூறுகையில், “தமிழ் நாடு முதலமைச்சர் அவர் களுடைய 70 ஆண்டுகால அரசியல் பணியும், மக்கள் பணியையும் சித்தரிக்கின்ற வகையில் 70 ஆண்டுகால வரலாறு புகைப்படக் கண் காட்சியாக இரண்டாவதாக மதுரையிலே ஆரம்பிக் கப்பட்டி ருக்கின்றது. பத்து நாட்களுக்கு புகைப்படக் கண்காட்சி நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் 8 மணி வரை பொதுமக்கள் பார்வை யிடும் வகையில் வசதி செய் யப்பட்டுள்ளது. பல்வேறு அரிய புகைப்படங்கள், தத் ரூப காட்சி வடிவமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்பட கண்காட்சி யை பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பி னரும் வந்து பார்வையிட வேண்டும். இன்னும் பல புகைப்படங்கள் வைக்கப் பட உள்ளது என்றார். இந் நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள் கோ.தளபதி (மதுரை வடக்கு), ஆ.வெங்க டேசன் (சோழவந்தான்), மு. பூமிநாதன் (மதுரை தெற்கு), தெற்கு மாவட்டச் செயலா ளர்மு.மணிமாறன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே. ராஜேந்திரன், மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாநிலக்குழு உறுப்பினர்கள் இரா.விஜய ராஜன், எஸ்.கே.பொன்னுத் தாய், எஸ்.பாலா அமெரிக் கன் கல்லூரி, லேடி டோக் கல்லூரி, யாதவா கல்லூரி முதல்வர்கள் மற்றும் ஆயி ரக்கணக்கானோர் கலந்து கொண்டு புகைப்படக் கண் காட்சியை பார்வையிட்டனர்.