வத்திராயிருப்பு அக்.5- விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் புகழ் பெற்ற முத்தாலம்மன் கோவில் தேரோட்ட கலை விழாவில் மும்மதத்தினரும் கலந்து கொண்டனர். வத்திராயிருப்பில் முத்தாலம்மன் கோவில் தேரோட்ட கலை விழா நடை பெற்றது. கலசலிங்கம் பல்க லைக்கழக வேந்தர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். பக்த சபா செயலாளர் விவேகா னந்தன் வரவேற்றார். கலை விழா நிகழ்ச்சி களை மதுரை மாவட்ட கிறிஸ்தவர் வாழ்வுரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை லாரன்ஸ் துவக்கி வைத்தார். பிரபல மருத்துவர் நிபுணர் முகமது ஷகீல், வத்திராயிருப்பு காவல் ஆய்வாளர் ஆறு முகம் உட்பட பலர் பங்கேற்ற னர். கலசலிங்கம் பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் ஸ்ரீதரன் பேசுகையில், ‘‘இந்த ஊர் ‘வற்றா இருப்பு’ என்ற பெயருக்கு ஏற்ப நீர் வளம் நிலவளம் அனைத் தும் வற்றாமல் உள்ளது. அதேபோல மக்கள் மனங்க ளிலும் அன்பு வற்றாமல் உள்ளது. அதன் வெளிப்பாடு தான் இந்த திருவிழா’’ என்றார். அருட்தந்தை லாரன்ஸ் பேசுகையில், ‘‘இந்த விழா, ஒரு சாதாரண வழிபாட்டு விழாவாக அல்லாமல் அனைத்து மதத்தினரையும் அரவணைத்து செல்கிற விழாவாக நடப்பது மிகவும் போற்றுதலுக்குரியது. இதுபோன்ற விழாக்கள் மூலம் நாடு முழுவதும் மத நல்லிணக்கத்தை எளிதாக ஏற்படுத்திவிடலாம். ஒரு விழாவானது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக இந்த விழா அமைந்துள்ளது. இங்குள்ள மக்களிடையே நிலவும் அன்பு நாடு முழுவதும் பரவ வேண்டும்’’ எனக் கூறினார். மருத்துவ நிபுணர் டாக்டர் முகமது ஷகீல் பேசுகை யில், ‘‘இது மக்கள் மனங் களை இணைக்கிற ஒரு விழா வாகும். நடைபெறுவது மிக வும் போற்றுதலுக்குரிய வகையில் இது நடத்தப்படு கிறது. இது தமிழகம் தாண்டி இந்தியா முழுவதும் பரவ வேண்டும்’’ என்றார். வத்திராயிருப்பு காவல் ஆய்வாளர் ஆறுமுகம் பேசு கையில், ‘‘மக்களின் பரந்த மனப்பாங்கு பல இதயங் களை ஒன்றிணைத்திருக்கி றது. இப்படி ஒன்றி ணைந்திருந்தால் காவல் துறையினரின் பணி எளி தாக்கப்படுகிறது. மேலும், பல நூறாண்டுகளுக்கு இவ் விழா தொடர வேண்டும்’’ என்றார். பக்த சபா தலை வர் சுந்தர்ராஜப் பெருமாள் நன்றி கூறினார்.