districts

img

மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம், ஜன.19- சேலம் மாவட்டத்தில் பிரபா கரன் என்ற மாற்றுத்திறனாளி விசாரணைக்கு அழைத்துச் செல் லப்பட்டு காவல்நிலையத்தில் மரணமடைந்தார்.  இச்சம்பவத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொலை வழக்காக பதிவு செய்ய வேண் டும், பாதிக்கப்பட்ட குடும்பத் திற்கு நிவாரண நிதி மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற் றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா தலைவர் போஸ் தலை மை வகித்தார். தாலுகா செயலா ளர் முகமது சுல்தான் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு உப்பு நிறுவன தொழிற்சங்க மாவட்ட தலைவர் பச்சமால், அனைத்து  வகை மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் இராஜ் குமார் ஆகியோர் பேசினர்.  முதுகுளத்தூர் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா அலுவல கம் அருகே நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சங்க தாலுகா செய லாளர் முனியசாமி தலைமை வகித்தார். தலைவர் மயில்சாமி முன்னிலை வகித்தார். தாலுகா நிர்வாகிகள் வில்வதுரை, ஹச னம்மாள், அழகுமுருகன், சுப்பிர மணி, முருகேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர். விருதுநகர் விருதுநகர் மாவட்டம் வெம் பக்கோட்டை வட்டம் தாயில்பட்டி யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு பாண்டியன் தலைமையே றறார். செயலாளர்  திருமலைக் குமார் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் கே.நாகராஜ் துவக்கி வைத்து பேசினார். மாவட்ட பொருளாளர் மா.சுந்தர பாண்டியன் பேசினார். மேலும் இதில், மாவட்ட குழு உறுப்பினர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.