விருதுநகர், மே 4- சமீபத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் அரசாணை எண் 52 ஐ அமுல்படுத்த மறுத்த தாக கூறப்படுகிறது. எனவே, அந்த அதிகாரிகள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். அனை த்து மாற்றுத் திறனாளிகளுக்கும் 100 நாள் வேலைத் திட்டத்தில் அட்டை வழங்க வேண்டும். புகைப் படம் எடுப்பதில் விலக்களிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப் போர் உரிமைகளுக்கான சங் கத்தின் சார்பில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் குமரேசன் தலைமையேற்றார். துவக்கி வைத்து மாவட்ட நிர்வாகி பி. அன்புச்செல்வன் பேசினார். முடி வில் மாவட்ட செயலாளர் கே.நாக ராஜ் கண்டன உரையாற்றினார். இதில், மாவட்ட நிர்வாகிகள் ஸ்ரீதேவி, சரவணன், நடராஜன், வதிஷ்டராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.