விருதுநகர், ஏப்.4- விருதுநகரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் பங்குனித் திருவிழா திங்கள் கிழமை நடை பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீரா வித் தெரு கிளை சார்பில் நக ராட்சி சாலையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி க்கு ஆர்.மாரிக்கனி தலைமை யேற்றார். கிளைச் செயலாளர் எம்.மாரிமுத்து, எம்.ராஜா ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாவட்டக்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் எம்.சுப்புராம், எம்.ஜெயபாரத் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் நகர்குழு உறுப்பினர்கள் பி.ராஜா, வழக்க றிஞர் சத்தியராஜ் மற்றும் வாலிபர் சங்க நகர் செயலாளர் கருப்ப சாமி, கார்த்திக்பாபு, ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மோர் பந்தல் : பாண்டியன் நகரில் சிஐடியு -சாலைப் போக்கு வரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் மோர் பந்தல் அமைக்கப் பட்டது. கிளைச் செயலாளர் ஜி.புஷ்பராஜ் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த தோழர் எஸ்.பால சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். நகர் செயலாளர் எல். முருகன், விஜயன், முருகேசன், செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.