விபத்தில் பள்ளி மாணவர் பலி
தேனி, ஆக. 4- ஆண்டிபட்டி அருகே இருசக்கர வாகனம் கட்டுப் பாட்டை இழந்து, கவிழ்ந்த விபத்தில் பள்ளி மாணவர் உயிரிழந்தார். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே ரோசனப் பட்டியை சேர்ந்தவர் குமார் மகன் ஹரி குமார்(22). கூலித் தொழிலாளி. வெள்ளிக்கிழமை காலை பதிவெண் இல்லாத தனது டூவீலரில் அதே பகுதியைச் சேர்ந்த பெருமாள் சாமி மகன் ரமேஷ் பிரபு(16), என்பவருடன் ஆண்டிபட்டி சென்றார். ஹரி குமார் வாகனத்தை அதிவேகமாக ஓட்டி சென்றுள்ளார். கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ரோட்டில் விழுந்ததில் வாகனத்தில் இருந்த இருவரும் தூக்கி வீசப்பட்டனர். தலையில் பலத்த காயமடைந்த ரமேஷ் பிரபு சம்பவ இடத்திலேயே பலியானார். இவர் கன்னியப்ப பிள்ளைபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். படுகாயம் அடைந்த ஹரிகுமார் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை க்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள் ளார். இந்த விபத்து குறித்து ராஜதானி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்.
சிறுமியை திருமணம் செய்த இளைஞர் உள்பட 4 பேர் மீது வழக்கு
மதுரை, ஆக.4- மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிறுமிக்கு குழந்தை பிறந்த சம்பவத்தில் சிறுமியை திருமணம் செய்த இளைஞர் உள்பட 4 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கர்ப்பிணியாக அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதுதொடர்பாக மருத்துவர்கள் திருப்பரங்குன்றம் ஊராட்சிய ஒன்றிய விரிவாக்க அலுவலர் சுமதிக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டார். இதில் சிறுமி திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் என்பதும் அவருக்கு சட்டப்படியான உரிய வயது வராத நிலையில் சிறுமியின் பெற்றோர், மதுரை நாகமலைப்புதுக்கோட்டை அருகே உள்ள புதுக்குளத்தைச் சேர்ந்த ராஜேஸ் என்பவருக்கு கடந்த 2021-இல் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்துக்குப்பின் நாகமலைப்புதுக்கோட்டையில் வசித்து வந்த சிறுமி கர்ப்பிணியானதால் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஜூலை 29 ஆம் தேதி குழந்தை பிறந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து விரிவாக்க அலுவலர் சுமதி புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில், சிறுமியை திருமணம் செய்த ராஜேஷ் (29), சிறுமியின் உறவினர் பாண்டிமீனா மற்றும் சிறுமியின் பெற்றோர் ஆகிய நால்வர் மீதும் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ மற்றும் குழந்தைத் திருமண தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
முகநூலில் அறிமுகமான நபர் பெண்ணிடமிருந்து நகை, பணத்தை திருடி தப்பி ஓட்டம்
மதுரை, ஆக.4- மதுரை சர்வேயர் காலனியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கருத்து வேறுபாட்டால் கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் அந்தப்பெண்ணுக்கு முகநூல் மூலம் கோவையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். இதைத்தொடர்ந்து இருவரும் நெருங்கிப்பழகி வந்துள்ளனர். இந்நிலையில் பெண்ணை பார்ப்பதற்காக அந்த இளைஞர் சில நாள்களுக்கு முன்பு மதுரை வந்துள்ளார். இதையடுத்து மதுரை கே.கே.நகரில் உள்ள தனியார் விடுதியில் அந்த இளைஞரும், பெண்ணும் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது அந்தப் பெண் தன்னுடைய நகைகள், கைப்பை, கைப்பேசிகள் ஆகியவற்றை அறையில் வைத்து விட்டு குளிக்கச் சென்றுள்ளார். இதைப் பயன்படுத்திய அந்த இளைஞர், பெண் வைத்துவிட்டுச் சென்ற 15 பவுன் நகைகள், கைப்பையில் இருந்த ரூ.20 ஆயிரம், இரு கைப்பேசிகள் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பி ஓடினார். குளித்து விட்டு வந்த பெண் இளைஞரை காணாமல் திகைத்துள்ளார். இதுதொடர்பாக விடுதி நிர்வாகத்திடம் கேட்டபோது, அந்த இளைஞர் விடுதியை விட்டு பையுடன் வெளியே சென்றதாகத் தெரிவித்துள்ளனர். அந்தப் பெண் தன்னுடைய நகைகள் , பணம், கைப்பேசிகள் என அனைத்தையும் இளைஞர் திருடிச் சென்றதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாக அந்தப் பெண் அளித்தப் புகாரின்பேரில் அண்ணாநகர் காவல்துறையினர் வெள்ளியன்று வழக்குப்பதிவு செய்து திருடிய இளைஞரைத் தேடி வருகின்றனர்.
விபத்தில் காவலர் பலி
தஞ்சாவூர், ஆக.4- தஞ்சாவூர் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட காவலர் மோட்டார் சைக்கிள் மோதியதில் உயிரிழந்தார். திருவாரூர் மாவட்டம் புள்ளவராயன்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல் (38). இவர் தஞ்சா வூர் மாவட்டம், மெலட்டூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தார். இவரும், அதே காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் முரு கேசன் உள்ளிட்டோரும், தஞ்சாவூர் அருகே உதாரமங்கலத் துக்கும் - குருங்களூருக்கும் இடைப்பட்ட பகுதி யில் வியாழக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக தஞ்சாவூர் மதுவிலக்கு அமல்பிரிவு தலைமைக் காவலர் ஜி.ராமநாதன் (45) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக பழனிவேல் மீதுமோதியது. இதனால், கீழே விழுந்து படுகாயமடைந்த பழனிவேல், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து மெலட்டூர் காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மதுரை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் ஆணைய தலைவர் கே.சந்துரு ஆய்வு
மதுரை, ஆக.4- மதுரையில் உள்ள சிறார் கூர்நோக்கு இல்லத்தில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு ஆய்வு மேற்கொண் டார். தமிழகத்தில் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி கள் மற்றும் சிறார் கூர்நோக்கு இல்லங்க ளின் செயல்பாடுகளை சீரமைக்கும் வகை யில் தனிநபர் ஆணையம் அமைக்கப் பட்டுள்ளது. ஆய்வு மேற்கொண்டு அவற்றின் மேம்பாடு குறித்து அறிக்கை தர தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தனிநபர் ஆணையத்தின் தலைவராக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஆணையத் தலைவர் கே.சந்துரு தமிழகத்தின் பல்வேறு மாவட் டங்களில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளி கள் மற்றும் கூர்நோக்கு இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று அவற்றின் செயல் பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அங்குள்ள சிறுவர்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டு நிறுவனங்களிடம் கருத்துகளை கேட்டறிகிறார். இதன் ஒரு பகுதியாக மதுரை காமராஜர் சாலையில் உள்ள சிறார் கூர்நோக்கு இல்லத்தில் ஆணையத் தலைவர் கே.சந்துரு வெள்ளியன்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்கள், அவர்களை பண்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை கள் குறித்தும் கூர்நோக்கு இல்ல நிர்வாகி களிடம் கேட்டறிந்தார். மேலும் கூர்நோக்கு இல்லங்களை செம்மைப்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது கூர்நோக்கு இல்ல நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.12.77 கோடியில் கடன் வழங்கல்
தேனி, ஆக.4- மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் வழங்கும் மாதாந்திர முகாமில் 170 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.12.77 கோடி மதிப்பில் செலுத்தப்பட்டதற்கான ஆணைகளை தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.சஜீவனா வழங்கினார் . தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்ட ரங்கில், மகளிர் திட்டத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கும் மாதாந்திர முகாம் மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் திட்ட இயக்குநர்கள் (மகளிர் திட்டம்) ரூபன்சங்கர்ராஜ், (ஊரக வளர்ச்சி முகமை) மதுமதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமார், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்கு நர் ஜீவா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா.நல்ல தம்பி, முன்னோடி வங்கி மேலாளர் மோகன்குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அண்ணாதுரை, மாவட்ட தொழில் மைய மேலாளர் அசோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமில் 170 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்க ளுக்கு ரூ.12.77 கோடி வங்கி கடன் அவர்களது கணக்கில் செலுத்தப்பட்டதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சி யர் வழங்கினார்.
தேனியில் மூடை, மூடையாக புகையிலை : வாலிபர் கைது 2 பேர் தலைமறைவு
தேனி, ஆக.4- தேனியில் 664 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வாலிபர் ஒருவரை கைது செய்த காவல் துறையினர் தலைமறைவான 2 பேரை தேடி வருகிறார்கள். தேனி என்.ஆர்.டி. சாலையில் காவல்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட முயன்றனர். போலீசாரை பார்த்ததும் காரில் வந்த 2 பேர் தப்பி ஓட முயன்றனர். அவர்களில் ஒருவரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். பின்னர் அந்த காருக்குள் போலீசார் சோதனையிட்டபோது, 11 மூட்டைகள் மற்றும் 2 சாக்குப் பைகளில் புகையிலை பொருட்கள் இருந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றி தேனி காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். கடத்தலுக்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் பிடிபட்டவர், தேனி பாரஸ்ட் ரோடு 8-வது தெருவை சேர்ந்த பாலாஜி (வயது 25) என்பதும், தப்பி ஓடியவர் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பதும் தெரியவந்தது. மேலும் விசாரணையில், தேனி விஸ்வநாததாஸ் நகரில் ஒரு வீட்டில் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து, அங்கிருந்து வேறு பகுதிக்கு காரில் எடுத்துச் சென்றதாகவும், இதற்கு பாரஸ்ட் ரோடு 7 ஆவது தெருவை சேர்ந்த நவரத்தினவேல் என்பவரும் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து விஸ்வநாததாஸ் நகரில் உள்ள வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கும் மூட்டை, மூட்டையாக புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அந்த வீட்டில் இருந்து 22 மூட்டைகள் மற்றும் 15 சாக்குப் பைகளில் இருந்த புகையிலை பொருட்களை போலீசார் கைப்பற்றினர். மொத்தம் 664 கிலோ புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் இந்த சம்பவம் குறித்து பாலாஜி, விக்னேஷ், நவரத்தினவேல் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதில் பாலாஜியை கைது செய்தனர். மற்ற 2 பேரையும் தேடி வருகின்றனர்.
நல வாரியத்தில் பதிவு செய்ய மாற்றுத்திறனாளிகளுக்கு அழைப்பு
தேனி, ஆக.4- தேனி மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் இதர உதவித்தொகைகள் பெற மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.சஜீவனா தெரிவித்துள் ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் சமுக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்று 10 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் நல வாரி யத்தில் பதிவு செய்திருப்பின் உதவிகள் பெற முடியும். இத்திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகள் இயற்கை மரணம், ஈமச்சடங்கிற்கான நிவாரணஉதவித் தொகை, விபத்து மரணத்திற்கான உதவித்தொகை மாற்றுத்திறனாளியின் வாரிசுதாரருக்கு வழங்கப்படுகிறது. நல வாரியத்தின் மூலம் மாற்றுத்திறனாளியின் மகன்-மகளுக்கு கல்வி உதவித்தொகை பெற 10 ஆம் வகுப்பு அதற்கு மேல் படிப்பவர்களாக இருத்தல் வேண்டும், மாற்றுத்திறனாளியின் மகன்-மகளுக்கு நல வாரியத்தின் மூலம் திருமண உதவித் தொகையும், மாற்றுத்திறனாளிகள் கண் கண்ணாடி வாங்கி பயன் பெறுவதற்கும், மாற்றுத்திறனாளிக்கு விபத்து ஏற்பட்டால் நல வாரியத்தின் மூலம் விபத்து நிவார ணம் மற்றும் பெண் மாற்றுத் திறனாளிக்கு நல வாரியத்தின் மூலம் பிரசவம், கருச் சிதைவு ஆகியவற்றிற்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் பயன் பெறுவதற்கு பிற அரசுத்துறை களிடமிருந்து நலவாரிய திட்டத்தில் உதவித்தொகை பெற்றிருக்கக் கூடாது. இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
வாடகை வாகனங்களில் பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் செல்ல அனுமதித்திடுக!
சிவகங்கை ஆட்சியரிடம் சிஐடியு மனு
சிவகங்கை, ஆக.4- அரசு பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளி லும் பள்ளி குழந்தைகளை தனியார் வாடகை வாகனங்களில் அழைத்துச் செல்கிற நடைமுறைகளை தொடர்ந்து அனுமதிக்கக்கோரி சிஐடியு சங்கத்தினர் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். சிவகங்கை மாவட்ட சாலைப்போக்கு வரத்து தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் சேதுராமன், மாவட்ட செயலாளர் தெட்சிணாமூர்த்தி, ஆகியோர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் படிப்பவர்களை தனியார் வாகனங்களில் ஏற்றி, இறக்கி சென்று வருகின்றனர். இப்பணியை சிறிதும் குறைபாடில்லாமல் செய்து வரு கின்றனர். இதற்கு பாதிப்பு ஏற்படாதவாறு தமிழக அரசு போட்ட உத்தரவை திரும்பப் பெற்று 2 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வா தாரத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் வலியுறுத்தியுள்ளனர். மனு அளிக்கும் நிகழ்வில் சங்கத்தின் தலைவர்கள் உள்பட திரளான தொழிலா ளர்கள் கலந்துகொண்டனர்.