districts

img

விசைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்வு கோரி அனைத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

இராஜபாளையம், ஜூன் 4- இராஜபாளையம் அருகே சத்திரப்பட்டியில் மே 24 ஆம் தேதி முதல் விசைத்தறி நெசவாளர்கள் கூலி உயர்வு கேட்டு வேலை நிறுத்தம் செய்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமையன்று மாலை சத்திரப்பட்டியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு போராட்டக்குழு தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். சிஐடியு மாநில துணைத்தலைவர் எம். மகாலட்சுமி சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் ஆர்.சோமசுந்தரம் ,மாநிலக்குழு உறுப்பினர் முனியாண்டி மற்றும் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.