திருச்சிராப்பள்ளி, நவ.14 - மத்திய அரசு பொதுத் துறை நிறுவனங்களான ரயில்வே, வங்கி, எல்ஐசி, பிஎஸ்என்எல், விமானம், விமான நிலையம், போக்கு வரத்து, மின்சாரம், விளை யாட்டு மைதானங்கள், அரசு நிலங்கள், அரசுத்துறை நிறு வனங்கள் ஆகியவற்றை தனி யாருக்கு தாரைவார்ப்பதை கண்டித்தும், பொதுத் துறை நிறுவனங்களை ஒன்றிய-மாநில அரசுகள் பாதுகாக்க வலியுறுத்தியும், ஒன்றிய, மாநில பொதுத்துறை ஊழி யர் சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் ஞாயிறன்று சேவா சங்கம் எதிரில் உள்ள நேரு சிலை முன்பிருந்து இருசக்கர பிரச்சார பேரணி புறப்பட்டு ஸ்ரீரங்கம் வரை நடைபெறும் என அறி விக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தொழிற் சங்கத்தினர் நேரு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் இருசக்கர பேரணிக்கு தயா ரான நிலையில், போலீசார் பேரணிக்கு அனுமதி மறுத்த னர்.
இதையடுத்து அங்கு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி பி.எஸ்.என்.எல்.இ.யூ மாவட்ட உதவி செயலாளர் அஸ்லாம் பாஷா, பி.இ. எப்.ஐ பொதுச்செயலாளர் ரமேஷ்குமார், ஏ.ஐ.பி.ஒ.சி துணைத் தலைவர் மணி வண்ணன், சந்தானம், என்.சி.பி.இ. கிருஷ்ணமூர்த்தி, டிஆர்இயூ கோட்ட செயலா ளர் மகேந்திரன், லிகாய் தலைவர் ராஜேந்திரன், செய லாளர் திருநாவுக்கரசு, தென்மண்டல குழு உறுப்பி னர் வேலுச்சாமி, போஸ்டல் ஒய்வூதியர் சங்க மாநில உதவி பொதுச் செயலாளர் செல்வன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்ட செயலாளர் செல்வ ராஜ், பெல் சிஐடியு சங்க பொதுச் செயலாளர் பிரபு ஆகியோர் பேசினர். இதில் அனைத்து தொழிற்சங்கத்தி னர் கலந்து கொண்டனர்.