districts

img

திருப்புவனத்தில் அனைத்துக்கட்சிகள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை, பிப்.2- சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் நகரில் சாலை களில் சுற்றித்திரியும் நூற் றுக்கணக்கான மாடுகள் பொதுமக்களுக்கு இடை யூறாகவும்,பெரும் பொருட் சேதத்தை யும்,உயிர் சேதத்  தையும் தொடர் சாலை விபத்  துக்களையும் ஏற்படுத்து கின்றன. அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் பல்வேறு  அமைப்புகள் சார்பில் பல  முறை முறையிட்டும் நட வடிக்கை எடுக்கப்படவில்லை. இதனைக் கண்டித்து அனைத்துக்கட்சிகள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் அய்யம்பாண்டி தலைமை வகித்தார். சிபிஐ ஒன்றிய செயலாளர் மோகன்,விசிக ஒன்றிய செயலாளர் கண்ணன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தண்டியப்பன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயலாளர் கண்ணகி,விசிக தெற்கு மாவட்ட துணைச் செயலா ளர் சுடர்மணி, நாம் தமிழர் கட்சி கார்த்திக்ராஜா, தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ் முருகன் ஆகியோர் பேசி னர். ஜனநாயக வாலிபர் சங்  கத்தின் ஒன்றிய செயலாளர் முத்துராஜா நன்றி கூறி னார்.

;