மதுரை, ஜூன் 8- ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த திறந்தவெளி மைதானம் அமைப்ப தற்காக மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை எனும் கிரா மத்தில் வகுத்து மலை அடிவாரத்தில் சுமார் 65 ஏக்கர் பரப்பளவிலான இடத் தினை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இந்த இடத்தில் திறந்தவெளி மைதா னம் அமைப்பதற்கான சூழல் உள்ளதா என்பது குறித்து தமிழக முதல்வரின் தனிச் செயலாளர் உதயச்சந்திரன் மற் றும் வணிகவரி- பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை மக்க ளவை உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் அதிகாரிகள் கீழக்கரை கிரா மத்திற்கு நேரில் வருகை தந்து மைதா னம் அமைவதற்கான இடத்தை பார்வை யிட்டு அதிகாரிகளிடம் பல்வேறு கருத் துக்களை கேட்டறிந்து ஆலோசனை நடத்தினர். இன்றைய ஆய்வினை தொடர்ந்து தேர்வாகியுள்ள இடங்கள் குறித்த தகவல் முதல்வரின் கவனத்திற்கு எடுத் துச் செல்லப்பட்டு விரைவில் இடம் தேர்வானவுடன் திறந்தவெளி ஜல்லிக் கட்டு மைதானம் அமைப்பதற்கான பணி கள் தொடங்கும் என அதிகாரிகள் தெரி வித்தனர்.