கேரளத்திற்கு எய்ம்ஸ் அனுமதிக் கப்படும் அறிவிப்பு செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என தில்லியில் கேரள அரசின் சிறப்பு பிரதி நிதி பேராசிரியர் கே.வி. தாமஸ் கூறினார். ஒன்றிய சுகாதார செயலாளர் சுதாம்சு பந்த் உடனான சந் திப்புக்குப் பிறகு இந்த தகவலை அவர் தெரிவித்தார். எய்ம்ஸ் அமைப்பதற்காக கோழிக் கோட்டில் 200 ஏக்கர் நிலம் கைய கப்படுத்தப் பட்டுள்ளதாக ஒன்றிய சுகா தாரத்துறை செயலரிடம் கே.வி.தாமஸ் தெரிவித்தார். நாட்டில் நோய்த்தடுப்பு சிகிச்சை குறித்து ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் முன்னிலையில் செப்டம் பர் 21, 22 ஆகிய தேதிகளில் கொச்சியில் மாநில அமைச்சர்கள் மற்றும் சுகாதா ரத்துறை செயலாளர்கள் கூட்டம் நடை பெறும் என்றும் அவர் கூறினார்.