அதானியின் கடனும் அக்காக்கள் கடனும்
நிகழ்வில் பேசிய மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், “இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு சுய உதவிக்குழு கடன்கள் வழங்கப்படுகிறது. பிற மாநிலங்களில் வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ள பெண்களுக்கு மகளிர் சுய உதவிக்குழுக்களில் கடன்கள் வழங்கப்படுகிறது. அதானிக்கு கொடுத்த கடன்கள் வருமோ? வராதோ? தமிழகத்தில் அக்காக்களுக்கு கொடுத்த கடன்கள் நிச்சயம் திரும்பி வரும்” என்றார்.
உதயநிதி ஸ்டாலின் மதுரையில் பேச்சு
மதுரை, பிப்.5- 21 மாதங்களுக்கு முன்பு அதி முக அரசு இருந்தபோது என்ன செய்தது. லட்சக்கணக்கான கோடி கடன்களையும், காலியான கஜா னாவையும், அடிமை அரசு என்ற அவப்பெயரையும் மட்டுமே விட்டுச் சென்றது என இளைஞர் நலன் மற் றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் கூறினார். மதுரை மாவட்டத்தில் நடை பெற்ற அரசு விழாவில் 72,092 பய னாளிகளுக்கு ரூ.173 கோடி மதிப் பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி, சியாமா பிரசாத் முகர்ஜி ரூர்பன் திட்டத்தின் கீழ் ரூ.8.65 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 30 திட் டப் பணிகளை தொடங்கி வைத்தார். இவ்விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:- ‘தூங்கா நகரம்’, ‘கூடல் நகர்’, ‘ஜல்லிக்கட்டு மாவட்டம்’… இப்படி மதுரை உங்களுக்கு மட்டுமல்ல… அனைவருக்கும் நெருக்கமான, பெருமையான மாவட்டம். இது, கண்ணகி நீதி கேட்ட மண். இப்ப டிப்பட்ட பெருமை கொண்டது மதுரை.
செயல்படும் அரசும்-வாயால் வடை சுடும் அரசும்
கண்ணகி தனது ஒற்றை கால் சிலம்பை வைத்து அன்றைய ஆட்சி யாளர்களுக்கு எதிராக நீதி கேட் டாரோ, அதேபோல் கடந்த தேர்தல் பிரச்சாரத்திற்காக மதுரைக்கு வந்தி ருந்த போதுதான் எனக்கும் அந்த ஒற்றைச் செங்கல் கிடைத்தது. அதை வைத்துக்கொண்டுதான், தமிழகம் முழுவதும் சுற்றிவந்து தமிழ்நாட்டை வஞ்சித்த ஒன்றிய-மாநில அரசுகளுக்கு எதிராக நீதி கேட்டு, பிரச்சாரத்தை தொடங்கி னேன். 2021-ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது இங்குள்ள எய்ம்ஸ் வளாகத்தில் செங்கல்லை எடுத்தேன். ஆனால் இன்னும் கட்டு மானப் பணியை ஒன்றிய அரசு தொடங்கவில்லை. அதன்பிறகு தொடங்கப்பட்ட கலைஞர் நூல கத்தை விரைவில் திறக்கவுள் ளோம். செயல்படும் அரசுக்கும், வாயில் வடை சுடும் அரசுக்குமான வித்தியாசம் இதுதான். ஒன்றிய அர சின் இந்த பட்ஜெட்டில்கூட மதுரை எய்ம்ஸ்-க்கு நிதி ஒதுக்கவில்லை. அதைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உறுப்பினர்கள் கை யில் எய்ம்ஸ் செங்கல்லை வைத்து போராடினர். 2024- நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்துக்கும் நான் அந்தக் கல்லுடன்தான் செல்ல வேண்டும் என நினைக்கிறேன். மதுரை மக்கள் அனைவரும் கை யில் செங்கல்லை எடுப்பதற்குள் எய்ம்ஸ் வேலைகள் தொடங்கி விடும் என நினைக்கிறேன்.
காலியான கஜானாவும்-அடிமை அரசும்
எதிர்க்கட்சிகள் பரப்பும் அவ தூறுகள் வாட்ஸ்அப் வதந்திகள் எங்களுக்கு முன்னால் போய்ச் சேர்ந்துவிடுகின்றன. இந்த 21 மாதங்களுக்கு முன்பு அதிமுக அரசு இருந்தபோது என்ன செய் தது. லட்சக்கணக்கான கோடி கடன்களையும், காலியான கஜா னாவையும், அடிமை அரசு என்ற அவப்பெயரையும் மட்டுமே விட்டுச் சென்றது. தடுமாறிக் கிடந்த தமிழ்நாடு அரசை தலை நிமிரச் செய்தவர் கருணாநிதி ஸ்டா லின். என்றால் அது மிகையல்ல. மதுரைக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழ்நாட்டுக்குமே திமுக அரசு இந்த 21 மாதங்களில் தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளில் 75 சதவிகிதத்துக்கும் மேல் நிறைவேற் றப்பட்டுள்ளது என்றார். குறிப்பாக விளையாட்டுத் துறை குறித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின், மதுரை மேலூர் அருகே யுள்ள திருவாதவூரைச் சேர்ந்த அர்ச்சனா பிப்.10-ஆம் தேதி முதல் பிப்.12-ஆம் தேதி கஜகஸ்தானில் நடைபெறவுள்ள 10-வது ஆசிய உள்ளரங்க தடகளப் போட்டிக்கு 50 மீட்டர் பிரிவில் தேர்வு செய் யப்பட்டுள்ளார்.
ஊமச்சிகுளம் அருகில் உள்ள கொடிமங்கலத்தைச் சேர்ந்த டி.செல்வபிரபு, 2022-ஆம் ஆண்டு கொலம்பியாவில் நடைபெற்ற உலக தடகள் சாம்பியன்ஷிப் மும் முறை தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இப்போட்டியில் வெள்ளிபதக்கம் வெல்லும் முதல் இந்திய வீரர் இவர்தான். மதுரை தெற்குவாசலைச் சேர்ந்த ஜெர்லின் அனிகா, 2021-ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் நடைபெற்ற காது கேளாதவர்கள் இறகுப்பந்து ஒலிம்பிக் போட்டி யில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்டு ஒற்றையர் பிரிவில் தங் கப்பதக்கமும், கலப்பு இரட்டை யர் போட்டியில் தங்கப்பதக்கமும், குழு போட்டியில் தங்கப்பதக்கமும் வென்றுள்ளார். 2022-ஆம் ஆண் டிற்கான அர்ஜூனா விருது பெற்ற வர். அலங்காநல்லூர் அருகில் உள்ள மேட்டுப்பட்டியைச் சேர்ந்த எம்.கபிலன், 2022-ஆம் ஆண்டு ஈரான் நாட்டில் நடைபெற்ற 14-வது ஆசிய ஆண்கள் வாலிபால் போட்டி யில் இந்தியா சார்பாக பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றார் என பட்டியலிட்டார். விழாவில், அமைச்சர்கள் பி. மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலா ண்மை இயக்குநர் எஸ்.திவ்ய தர்ஷினி, இ.ஆ.ப., அவர்கள், ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர், மாநக ராட்சி மேயர் இந்திராணி, துணை மேயர் திரு.தி.நாகராஜன், கூடுதல் ஆட்சியர் செ.சரவணன், மாநக ராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜீத் சிங், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. கோ.தளபதி (மதுரை வடக்கு) , ஆ.வெங்கடேசன் (சோழவந் தான்), மு.பூமிநாதன் (மதுரை தெற்கு) ஆகியோர் கலந்து கொண்டனர். விழா முடிந்த பின்னர், அமைச் சர் உதயநிதி ஸ்டாலினை வர வேற்பதற்காக திடல் வாசலில் இருந்து மேடை வரை கரும்புகள், வாழை மரங்களால் அமைக்கப் பட்டிருந்த பிரம்மாண்ட தோர ணங்கள் அனைத்தையும் விழா வில் பங்கேற்க வந்த பெண்களும், கட்சித் தொண்டர்களும் ஆர்வத்து டன் எடுத்துச் சென்றனர்.