districts

img

வேளாண்மை, உழவர் நலத்துறை பனை ஏறும் கருவி செயல் விளக்கம்

தூத்துக்குடி, மார்ச் 20-  பனை ஏறும் கருவி செயல் விளக் கம், அக்கருவியினை பயனாளி களுக்கு வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சியில் தூத்துக்குடி எம்பி, அமைச்சர்கள், ஆட்சியர், மேயர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், மீன் வளம், மீனவர் நலன் மற்றும் கால் நடை பராமரிப்பு துறை அமைச்சர்  அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் ஆகி யோர் ஞாயிறன்று அந்தோணியார் புரத்தில் வேளாண்மை மற்றும் உழ வர் நலத்துறையின் சார்பாக நடை பெற்ற பனை ஏறும் கருவி செயல் விளக்கத்தினை, மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் முன்னிலை யில் பார்வையிட்டு அக்கருவி யினை பயனாளிகளுக்கு வழங்கி னார்கள்.  தொடர்ந்து, தூத்துக்குடி நாடா ளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில்: புதிய பனைகள் வளர்ப்பு, இருக் கக்கூடிய பனை மரங்களை பாது காப்பது உள்ளிட்டவைகளுக்கான பல்வேறு திட்டங்களை சனியன்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். இப்போது இருக்கக்கூடிய சூழலில் பனை ஏறுவதற்கே தயக் கம் இருக்கக்கூடிய சூழல் உள் ளது, ஏனென்றால் அதில் இருக்கக் கூடிய ஆபத்தை நினைத்து பல படித்த இளைஞர்கள் இந்த தொழி லுக்கு வர தயக்கம் காட்டுகின்ற சூழல் இருக்கிறது. எனவே, இந்த பனையேறும் தொழிலை பாதுகாப்பாக செய்வ தற்கு, தென்னை மரங்கள் ஏறு வதற்காக கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளில் கூடுதல் இணைப்பு களை கொண்டு பனைமரங்கள் ஏறு வதற்கான கருவிகள் கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. அக்கருவியின் செயல் விளக்கம் மற்றும் பயனாளி களுக்கு அதனை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது என்றார். இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட வேளா ண்மை இணை இயக்குனர், வேளா ண்மை துணை இயக்குனர்கள், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சி யர் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.