மதுரை, டிச.20- விவசாயத் தொழிலாளர் களுக்கு தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என்று விவசாய தொழி லாளர் சங்கத்தின் மதுரை மாவட்ட 10 ஆவது மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது. அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் 10 ஆவது மதுரை மாவட்ட மாநாடு டிசம்பர் 20 செவ்வாயன்று யா.ஒத்தக்கடை யில் சங்கத்தின் முன்னாள் மாவட் டத் துணைச் செயலாளர் மறைந்த தோழர் மு.பாலுச்சாமி நினைவரங் கத்தில் நடைபெற்றது. திருப்பரங்குன்றம் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்ட தோழர் கே.எம்.கணபதி ஜோதியினை மூத்த தோழர் சி. ராமகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். செல்லம் பட்டி ஒன்றியத்தில் தோழர்கள் கே. தேவராஜ், சி.தேவராஜ் ஆகி யோர் நினைவு ஜோதியினை சங் கத்தின் மாநிலப் பொருளாளர் எஸ். சங்கர் பெற்றுக்கொண்டார். மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் வி.உமாமகேஸ்வரன் தலைமை வகித்தார். சங்கக் கொடியினை மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.டி. தீத்தாரப்பன் ஏற்றினார். வரவேற் புக் குழுச் செயலாளர் எம். கலைச் செல்வன் வரவேற்றுப் பேசினார். மாவட்ட துணைச் செயலாளர் து.இராமமூர்த்தி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநிலத் தலைவர் ஏ.லாசர் துவக்கவுரை யாற்றினார். மாவட்டச் செயலா ளர் சொ.பாண்டியன் வேலையறிக் கையும் மாவட்டப் பொருளாளர் ஜெ.காசி வரவு-செலவு அறிக்கை யும் சமர்ப்பித்தனர். தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் எஸ்.பி.இளங்கோவன், சிஐடியு மாவட்டச் செயலாளர் கே. அரவிந்தன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர் நிறைவுரையாற்றினார்
புதிய நிர்வாகிகள் மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவராக ஜெ.காசி, மாவட்டச் செயலாளராக வி.உமாமகேஸ் வரன், மாவட்டப் பொருளாளராக பி.ஆறுமுகம், மாவட்டத் துணைத் தலைவர்களாக எல்.கெளசல்யா, ஏ.தனசேகரன், துணைச் செயலா ளர்களாக சொ.பாண்டியன், தூ. இராமமூர்த்தி ஆகியோர் உட்பட 21பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மதுரை மாவட்டத்தில் விவ சாயத்தொழிலாளர்கள் மற்றும் வீடு இல்லா அனைவருக்கும் தமிழக அரசு கணக்கு எடுத்து இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். 100 நாள் வேலையை 200நாளாக உயர்த்தி சட்டக் கூலி ரூ.600 வழங்க வேண்டும். விவசாயத் தொழிலா ளர்களுக்கு மாதம் ஒய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.