தருமபுரி, ஜூலை 25- குடிமனைப்பட்டா வழங்கக்கோரி அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்கத்தின் சார் பில் செவ்வாயன்று அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம வேலை உறுதி யளிப்புத் திட்டத்தின் கீழ் விவசாய தொழிலாளர் களுக்கு 200 நாள் வேலை வழங்கி, தினக்கூலி ரூ.600 வழங்க வேண்டும். வேலை செய்த தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும். செல்லம்பட்டி பஞ்சா யத்து, கீளானூர் ஆதிதிராவிடர் இன மக்களுக்கு சர்வே நம்பர் 5/2 உள்ள கல்லாங்குத்து புறம்போக்கு நிலத்தை வகை மாற்றம் செய்து, மனு கொடுத்த மக்களுக்கு மனைப்பட்டா வழங்கவேண்டும். சிட்லிங் பஞ்சா யத்தில் உள்ள கத்திரிப்பட்டி கிராமத் தில் வீடு கட்டி குடியிருந்து வரும் பழங் குடியினமக்களுக்கு மனைப்பட்டா, நில பட்டா வழங்க வேண்டும். வேட கட்டமடுவு பஞ்சாயத்து, மேல் செங் கப்பாடி கிராமத்தில் உள்ள 29/5 சர்வே நம்பரில் உள்ள நிலத்தில் மனு கொடுத்த அனைவருக்கும் மனைப் பட்டா மற்றும் 62/7 சர்வே நெம்பரில் நில பட்டா வழங்க வேண்டும். மத்தி யம்பட்டி பஞ்சாயத்து வேடியப்பன் கோவில் கிராமத்தில் வீடுகட்டி குடி யிருந்துவரும் இருளர் இன மக்க ளுக்கு சர்வே நெம்பர் 154/1 நிலத் தில் மனைப்பட்டா வழங்க வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். ஒன்றியத் தலைவர் ஜடை யாண்டி போராட்டத்திற்கு தலைமை ஏற்றார். இதில், மாவட்டச் செய லாளர் எம்.முத்து, மாவட் டத் தலைவர் கே.கோவிந்த சாமி, மாவட்டத் துணைத் தலைவர் இ.கே.முருகன், ஒன்றிய நிர்வாகிகள் கும ரேசன், தங்கராஜ், வீரப்பன், சென்னு, ராஜா, மாரியப்பன், மாதையன், பழனியம்மாள், தேசிங்கு ராஜன் உள் ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். காத்திருப்பு போராட் டத்தில் பேச்சுவார்த்தைக்கு அழைத் ததின் அடிப்படையில், அரூர் வட் டாட்சியர் மனைப்பட்டா மற்றும் நிலப்பட்டா ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளிக் கப்பட்டது. இதையடுத்து காத்தி ருப்பு போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.