மதுரை, ஜூலை 8- 100 நாள் வேலையை 150 நாட்க ளாக உயர்த்தி சட்ட கூலி ரூ.381 வழங்க வேண்டும். 60 வயது முடிந்த விவசாய தொழிலாளர் களுக்கு ஓய்வூதியம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். தமிழகத்தில் வீடு கட்டும் திட்டத்திற்கான தொகை யை ரூ. 5 லட்சமாக உயர்த்த வேண் டும். ஏழை எளிய மக்களுக்கு இல வச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். செல்லம்பட்டி ஒன்றியத் துக்கு உட்பட்ட கருமாத்தூர் ஊராட்சி வடக்கம்பட்டியில் தலித் மக்கள் வாழும் பகுதியில் பெண் களுக்கான கழிப்பறையை உடனே அமைக்க வேண்டும். கோவிலாங் குளம் ஊராட்சியில் ஜெயராஜ் நக ரில் புதிய சாலை, கழிவு நீர் வாய்க் கால், தெரு விளக்கு, குடிநீர் குழாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும். கருமாத்தூர் கோவிலாங்குளம் ஊராட்சியில் தலித் மக்கள் வாழும் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை உட னடியாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கருமாத்தூரில் விவ சாயத்தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ஜெ.காசி தலைமை வகித்தார். துவக்கி வைத்து மாவட்ட தலைவர் வி.உமா மகேஸ்வரன் பேசினார். கோரிக்கை விளக்கி மாவட்டச் செயலாளர் சொ. பாண்டியன் பேசினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செய லாளர் ரத்தினம் ஆதரித்துப் பேசி னார். நிறைவு செய்து வைத்து முன்னாள் சட்டமன்ற உறுப்பின ரும் சங்கத்தின் மாநில தலைவரு மான ஏ.லாசர் பேசினார். சங்கத்தின் ஒன்றியப் பொருளாளர் பாண்டி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் பி.எஸ். முத்துப்பாண்டி உட்பட விவசாயக் கூலி தொழிலாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர்.