மதுரை, ஜூலை 21- மணிப்பூர் கொடூரத்தைக் கண்டி த்து பல்வேறு மாவட்டங்களில் ஆவேச போராட்டம்நடைபெற்றது. பாஜக ஆளும் மணிப்பூர் மாநிலத்தில் 75 நாட்களுக்கும் மேலாக வன்முறை நீடித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த ஒன்றிய -மாநில அரசுகள் நடவ டிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துவருவதாக எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளன. இந்நிலையில் கொடூரத்தின் உச்சமாக குக்கி பழங் குடியின 2 பெண்களை நிர்வாண மாக்கி, ஏராளமான ஆண்கள் முன்னிலையில் பாலியல் வல்லு றவு செய்துள்ளனர். இந்த சம்பவம் நாட்டு மக்களிடம் அதிர்ச்சியை யும் கோபத்தையும் ஏற்படுத்தி யுள்ளது. மணிப்பூரில் நிகழ்ந்துள்ள இந்த கொடூரத்தைக் கண்டித்தும் அந்த கயவர்களை கைது செய்து கடும் தண்டனை வழங்க வேண் டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும். உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் உண்மை அறியும் குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஜூலை 21 வெள்ளியன்று ஆவேச போராட்டம் நடைபெற்றது. அகில இந்திய வழக்கறி ஞர்கள் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக மாவட்ட செயலாளர் ஆர். செளரி ராமன் தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது . மாநில துணைத் தலைவர் என். முத்து அமுத நாதன், மாநிலச் செயலாளர் ஷாஜி செல்லான், மாநிலக்குழு உறுப்பி னர்கள் பாலகிருஷ்ணன், ஜெயக் குமார், வாமனன், சீனிவாச ராக வன், மதுரை மாவட்ட வழக்கறி ஞர்கள் சங்கம் மாவட்டத் தலை வர் நெடுஞ்செழியன், செயலாளர் மோகன் குமார் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர்.
மணிப்பூர் பாஜக அரசை கலைத்திடுக
மணிப்பூர் பழங்குடியின பெண் களை நிர்வாணமாக்கி பாலியல் வன்கொடுமை செய்த சம்ப வத்திற்கு ஒன்றிய மற்றும் மணிப்பூர் மாநில அரசுகளுக்கு தேன்சுடர் பெண்கள் இயக்கத்தினர் கண்ட னம் தெரிவித்துள்ளனர். இது குறித்து தேன்சுடர் பெண் கள் இயக்கத்தின் தலைவர் சரிதா தெரிவிக்கையில், பெண்களைப் பாதுகாக்கத்தான் அரசு மற்றும் அதற்கான அதிகாரிகள். ஆனால் மணிப்பூரில் கடந்த 3 மாதங்க ளுக்கு மேலாக வன்முறை சம்பவங் கள் நடந்து வருகிறது. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது பெண் கள் மற்றும் குழந்தைகள் தான். இதில் இரண்டு பழங்குடியின பெண்களை நிர்வாணமாக்கி கூட்டு பாலியல் கொடுமை செய்தது மிகவும் கண்டிக்கத்தக்க செயலா கும். மணிப்பூரில் நடந்த சம்பவத் தால் பெண்கள் இனமே அழிக் கப்பட்டு விடுமோ என்ற அச்சம் நாடு முழுவதும் உள்ள அனைத்து பெண்களிடமும் வந்துவிட்டது. மணிப்பூர் மாநிலத்தில் சட்ட ஒழுங்கை சீர்படுத்தாத மாநில அரசு கலைக்கப்பட்டு அங்கு குடி யரசுத்தலைவர் ஆட்சி அமல் படுத்த வேண்டும் என்றார்.
தேனி
தேனியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு உசேன் தலைமை வகித்தார் .மாவட்டச் செயலாளர் ஏவி.அண்ணாமலை கண்டன உரையாற்றினார். ஏரியா செயலாளர் பி.ஜெயராஜ் ,மாவட் டக்குழு உறுப்பினர் பி.ஜெயன் ,ஜி.பி.முருகன் ,முத்துப்பிள்ளை, மணிகண்டன் ,கோபால் ,மொக்கப் பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இராமேஸ்வரம்
மணிப்பூர் வன்முறையை ஒன்றிய அரசு தடுத்து நிறுத்தி டக்கோரி இராமேசுவரம் தீவு அனைத்து சமூக மக்கள் சார்பில் 1000 பெண்கள் உட்பட 3 ஆயி ரத்திற்கும் மேற்பட்டவர்கள் பேர ணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்கச்சிமடத்தில் புனித தெரசால் ஆலயத்திற்கு முன்பு தொடங்கி குழந்தை இயேசு ஆலயம் வரை பேரணி நடை பெற்றது.