தேனி, ஜூன் 14- 10 ஆண்டுகால போராட் டத்திற்கு பின் ஜூன் 14 வியாழனன்று போடி ரயில் சேவை துவக்கப்படுகிறது . அதற்கான 120 கிலோ மீட்டர் சோதனை ஓட்டம் புதன்கிழமை மதுரையில் இருந்து போடி வரை நடை பெற்றது. கடந்த 2010 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி மதுரை- போடி இடையிலான மீட்டர் கேஜ் ரயில் சேவை நிறுத் தப்பட்டு கிடப்பில் போடப் பட்டது. பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பி னராக இருந்த ஏ.லாசர் தலை மையில் வர்த்தகர்கள், அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் அடங்கிய போராட்டக்குழு அமைக்கப்பட்டு சிறப்பு மாநாடு, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல் வேறு வடிவங்களில் போராட் டம் நடத்தியும் ,பிரதமர் உள் ளிட்ட தலைவர்கள், ரயில்வே அதிகாரிகளை சந்தித்தும் தொடர் போராட்டம் நடத்தி யதன் விளைவாக ரயில்வே அமைச்சகம் திட்டத்திற்கு மறு அனுமதி கொடுத்து படிப் படியாக நிதி ஒதுக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை 12 ஆண்டு களாக அகல ரயில் பாதை திட்ட பணிகள் சுமார் ரூ.560 கோடி மதிப்பீட்டில் நிறைவு பெற்ற நிலையில் வியாழ னன்று ரயில் சேவை மதுரை மற்றும் சென்னை வரை துவங்கப்பட உள்ளது சோதனை ஓட்டம் மதுரை-போடி இடையே அகல ரயில்பாதையில் அதிர்வுகள் குறித்த இறுதிக் கட்ட ஆய்வு ரயில் புதன் கிழமை நடைபெற்றது.
OMS (Oscillation Monitoring System) எனப் படும் சிறப்பு ரயில் என்ஜின் மூலம் மதுரையிலிருந்து போடி வரை சோதனை செய்யப்பட்டது. இரண்டு பெட்டிகள் இணைக்கப்பட்ட இந்த ரயிலில் நவீன கருவி கள் மூலம் ரயில்பாதையின் அதிர்வு தாங்கும் திறன் சோதனை செய்யப்பட்டது. காலை 10 மணிக்கு புறப்பட்ட ரயில் போடிக்கு 11.15 மணிக்கு வந்து சேர்ந்தது. பின்னர் 11.45 மணிக்கு மதுரைக்கு புறப் பட்டு சென்றது. ரயிலில் பொறியாளர் குழுவினர் ரயில்பாதை குறித்து இறுதிக் கட்ட சோதனை மேற்கொண்ட னர். வியாழக்கிழமை போடி யில் நடைபெறும் நிகழ்ச்சி யில் போடி-மதுரை, போடி-சென்னை ரயில்களை ஒன் றிய தகவல் மற்றும் ஒலி பரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் பங்கேற்று ரயில் சேவைகளை தொடங்கி வைக்க உள்ளார். பாராட்டு விழா போடி -மதுரை ,அகல ரயில் பாதை திட்ட அம லாக்கக்குழு ,போடி வர்த்த கர் சங்கம் சார்பில் ரயிலை வரவேற்றும் இத்திட்டத் திற்கு பாடுபட்ட தலை வர்களுக்கு போடி வர்த்தகர் சங்க மண்டபத்தில் பாராட்டு விழா நடைபெறுகிறது.