districts

img

அனைவரையும் உள்ளடக்கிய புதிய சாலக்குடி

பேராசிரியர். சி.ரவீந்திரநாத்தை யும் அவர் முன்வைக்கும் புதிய சாலக்குடி யோசனையையும் மக்கள் ஏற்றுக்கொண்டனர். சாலக்குடி மக்களவைத் தொகுதி எல்டிஎப் வேட்பாளர் பேராசிரியர் சி. ரவீந்திரநாத் தொகுதியின் அனைத்துத் துறைகளையும் முன்னேற்றப் பாதை யில் இட்டுச் செல்ல வேண்டும் என்ற தனது தொலைநோக்குப் பார்வையை பகிர்ந்து வாக்கு கேட்கிறார். புதிய  சாலக்குடியின் வளர்ச்சிக் கருத்துருக்க ளும் கருத்துக்களும் அவரது பதில் களும் மிகவும் நேர்மறையானவை. புதிய சாலக்குடியின் வளர்ச்சிக் கருத்து, மாநில அரசின் புதிய கேரளம்  என்ற கருத்துடன் ஒத்துப்போகிறது. நிலையான வளர்ச்சியே இதன் அடிப்  படை என வேட்பாளர் தெரிவித்தார். இடதுசாரி சித்தாந்தத்தின் அடிப்படை யிலான வளர்ச்சி முன்வைக்கப்படு கிறது. அனைத்து துறைகளிலும் வளர்ச்  சியை கொண்டு வர திட்டமிடப்பட்டுள் ளது. அனைத்தும் பிரதானமாக இருக் கும். எஸ்சி, எஸ்டி பிரிவில் சிறப்புத் தலையீடு இருக்கும். இது எப்படி சாத்தியம் என்பது  பல்வேறு பகுதிவாரியாக விளக்கப்படு கிறது. வேளாண் துறையை நவீனமய மாக்குவது முக்கியம் என்பதை நினை வூட்டுகிறது. பருவநிலை மாற்றம் உள்  ளிட்ட சவால்களை எதிர்கொள்ள வேளாண் துறையில் சமச்சீர் வளர்ச்சி  தேவை. கூட்டுறவு இயக்கம், வேளா ண்மைத் துறை, உள்ளாட்சி அமைப்பு கள், குடும்பஸ்ரீ ஆகியவற்றைப் பயன் படுத்தி உற்பத்தியைப் பெருக்கி, விளை பொருட்களை விற்பனை செய்ய முடி யும் என்று மாஸ்டர் கூறும்போது, விவ சாயிகளின் முகத்தில் நம்பிக்கை மின்னு கிறது. நாட்டின் நம்பிக்கையாக இருக்கும்  இளைஞர்களுக்கு புதிய சாலக்குடி யும் முக்கியமானது. புதிய தலைமுறை  நவீனமயமாக்கப்பட வேண்டும். ஒவ் வொரு துறையையும் பற்றி அவர்கள் அறிந்திருக்க வேண்டும். அதற்கு புதிய  நுட்பங்கள் இருக்க வேண்டும். வாய்ப்பு களை பயன்படுத்தி புதிய தலைமுறை யை நவீனப்படுத்துவார் மாஸ்டர் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.