districts

img

குத்தகை விவசாய நிலங்களை விவசாயிகளுக்கு சொந்தமாக்கிடுக!

மதுரை, அக்.29- தமிழ்நாடு அடிமனை பயனாளி கள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் மதுரை மாவட்ட அமைப்புக் கூட்டம் திருப்பரங்குன்றம் கே.பி.ஜானகி அம்மாள் நினைவரங்கத்தில் ஞாயிறன்று நடைபெற்றது.  கூட்டத்திற்கு, ஆ.சி.சுப்பிர மணியன் தலைமை வகித்தார். ந.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். எஸ்.பி.இளங்கோவன், ஏ.வேல்பாண்டி, வீ.அடக்கி வீரணன் ஆகியோர் சங்கத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து பேசினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சாமி.நட ராஜன் நிறைவுரையாற்றினார். விவ சாயிகள் சங்க மாவட்ட நிர்வாகி கள் பி.தனசேகரன், பி.அய்யாவு, பி.நாகேந்திரன், ஆர்.சித்ரா தேவி ஆகியோர் உட்பட விவசாயிகள் பெண்கள் என பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாவட்டத் தலைவ ராக ஆ.சி.சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளராக ஆர்.முத்துராமலிங்கம், பொருளாளர் வி.கண்ணன், துணைத் தலை வராக லட்சபாண்டி, துணைச் செயலாளராக கே.முருகேசன் ஆகியோர் உட்பட 13 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. அறநிலைய சட்டப்பிரிவு 34ன் படி பல தலைமுறைகளாக குடி யிருப்பவர்களுக்கு, சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அந்தந்த இடங்களுக்கு நியாய மான விலையை தீர்மானித்து அவர்களுக்கு சொந்தமாக்கிட வேண்டும், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு அரசே உரிய தொகையை செலுத்தி பயனாளி களுக்கு சொந்தமாக்கிட வேண்டும், பல தலைமுறைகளாக அடிமனைகளில் வீடுகள், சிறுகடை கள் கட்டி பயன்படுத்தி வருபவர்க ளை ஆக்கிரமிப்பாளர்கள் என்ற பெயரில் இடத்தை விட்டு வெளியேற்றும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும், அடிமனையில் குடியிருப்பவர்களுக்கு அடிமனை யும் குத்தகை விவசாய நிலங் களை விவசாயிகளுக்கும் சொந்த மாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.