மதுரை, பிப்.7- மதுரை மாவட்டம் கீழடியில் முதல் 2 கட்ட அகழாய்வு தகவல்கள் அடங்கிய விரிவான அறிக்கையை ஒன்றிய அரசு வெளியிட கோரி வழக்கில் விரிவான விசாரணைக்காக வழக்கை ஒத்திவைத்து உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக மதுரையை சேர்ந்த பிரபாகர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
மனுவில், ‘‘சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2013-ஆம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை ஒன்றிய அரசின் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணியை தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்டார். இந்த அகழாய்வின் போது 5000-க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த பொருட்கள் கிடைத்தன. இந்நிலை யில் திடீரென அமர்நாத் ராம கிருஷ்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து ஸ்ரீராமன் என்பவர் கீழடி தொல்லி யல் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டு 3-ஆம் கட்ட அக ழாய்வில் குறிப்பிடும்படியான கண்டு பிடிப்புகள் இல்லை என தெரி வித்தார். முதல் 2 கட்ட கீழடி அகழாய்வு அறிக்கையை ஒன்றிய அரசிடம் தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்துள் ளார். இந்த அறிக்கையில், கீழடியில் நிலவிய கலாச்சாரம், விவசாயம் செய்த பயிர்கள், விலங்குகள், நகர நாகரீகத்தை நோக்கி நகர்ந்த தன்மை குறித்து விரிவாக தெரிவித்துள்ளார்.
கீழடியில் கிடைத்த பொருட்களை ரேடியோ கார்பன் எனும் பகுப்பாய்வு முறையில் ஆய்வு செய்ததில் கிட்டத்தட்ட 2600 ஆண்டுகளுக்கு முந்தையது எனத்தெரிய வந்தது. கீழடியில் தற்போது 4 முதல் 9-ம் கட்ட அகழாய்வு பணிகளை மாநில அரசு மேற்கொண்டு, இதுதொடர் பான அறிக்கைகளை வெளியிட்டுள் ளது. ஆனால், ஒன்றிய அரசு மேற்கொண்ட முதல் 2 கட்ட அகழாய்வு பணிகள் குறித்த அறிக்கையை இது வரை வெளியிடவில்லை. 982 பக்கமுடைய அமர்நாத் ராம கிருஷ்ணன் அறிக்கையை ஒன்றிய அரசு வெளியிட்டால் மட்டுமே கீழடி தொடர்பான தெளிவான வரலாற்று முடிவுகள் கிடைக்கும்.
எனவே கீழடியில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்ட முதல் 2 கட்ட அக ழாய்வு தகவல்கள் அடங்கிய விரி வான அறிக்கையை அரசு வெளியிட உத்தரவிட வேண்டும்’’ எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ண குமார் மற்றும் விஜயகுமார் ஆகி யோர் முன் புதனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விரிவான விசார ணைக்காக வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.