districts

img

தே.கல்லுப்பட்டி அருகே கண்டெடுக்கப்பட்ட கி.பி. 16 ஆம் நூற்றாண்டு நடுகல் கற்சிற்பம்

மதுரை, நவ.24- மதுரை மாவட்டம் தே.கல்லுப் பட்டி அருகே மோதகம் பகுதியில்  500 ஆண்டு பழமையான நடுகல்  சிற்பம் கண்டறியப்பட்டது.  மோதகம் கரையாம்பட்டியைச் சேர்ந்த பூசாரி முத்துசாமி  என்ப வர் தங்கள் ஊரில் பழமையான சிற்பம்  இருப்பதாக கொடுத்த  தகவ லின்படி மதுரை சரசுவதி நாராய ணன் கல்லூரியின் முதுகலை வர லாற்றுத்துறை உதவிப் பேரா சிரியர், பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளருமான முனைவர்  முனீஸ்வரன் தலைமையில் பேரா சிரியர் முனைவர் லட்சுமண மூர்த்தி, ஆய்வாளர் அனந்தகுமரன், தமிழ் செல்வம்  ஆகியோர் திருமங்கலம் மோதகம் கரையாம்பட்டி  பகுதி யில் மேற்பரப்பு கள ஆய்வு மேற்  கொண்டனர்.அப்போது கிபி 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடு கல்  கற்சிற்பம் கண்டறியப்பட்டது. இதுகுறித்து உதவிப் பேராசிரி யர் முனைவர் முனீஸ்வரன் கூறு கையில், பாண்டியர் காலத்தில் செங்குடி நாட்டின் எல்லைக்கு உட்பட்ட மோதகம் வேளாண்மை, வணிகம் செய்வதில் சிறப்பு பெற்று  விளங்கி இருந்தது

இவ்வூரில் பல  வரலாற்றுத் தடயங்கள் புதைந்த நிலையில், மக்கள் வசிப்பிடம் இல் லாமல் அரசாங்க பதிவேட்டில் மட்டும் ஆவாரம்பட்டி,  சுப்புலா புரம், கரையாம்பட்டி, தாதமடம்  போன்ற  நான்கு  கிராமத்திற்கு தாய்  கிராமம் என்ற பெயரில் மோதகம்  தற்போது இருக்கின்றன.  சங்ககால முதற்கொண்டு போரில் வீர மரணமடைந்த வீர னுக்கு நினைவாக  நடுகல் நடப்பட்டு காவல் தெய்வமாக  வழிபட்டு வரு கிறது தமிழ் சமூகம். திருமங்கலம் ராஜபாளையம் பிரதான சாலை யில் கரையாம்பட்டி விலக்குயின்  வடக்கு திசையில் முட்புதரில் எழுத்துகள் கொண்ட நடுகல் கண்டறியப்பட்டது. மூன்று வரி கொண்ட எழுத்துக்கள் வாணன், உட்பட்ட என்ற வரியைத் தவிர  மற்ற எழுத்துக்கள்  முற்றிலும் தேய் மானத்தோடு காணப்பட்டதால் பொருள் அறியமுடியவில்லை.   ஆண்- பெண் சிற்பம்  நடுகல் நான்கு அடி உயரம் 2 அடி  அகலம்  கொண்டது. நடுகல்லில் ஒரு ஆண், பெண் சிற்பம் வலது காலை மடித்து இடது காலை நீட்டி  அமர்ந்த கோலத்தில் செதுக்கப் பட்டுள்ளது.  இச்சிற்பம் வெயில் மற்றும்  மழையில் இருந்து பாதுகாக்க புடைப்புச் சிற்பமாக செதுக்கப் பட்டுள்ளது. கபோதத்துடன் கூடிய  மூன்று நாசிக் கூடுகள்  அழகான  தோரணை வாயில் கொண்டுள் ளது. சிற்பத்தின் எழுத்து வடிவம் மற்றும் உருவ அமைப்பை பொறுத்தமட்டில் கிபி 16 ஆம் நூற்றாண்டு சேர்ந்த சிற்பம் என்று  கருதலாம்.  இச்சிற்பத்தை பார்க்கும்  போது இப்பகுதியில் சிறப்பாக ஆட்சி செய்த குறுநில மன்னர்    பரம்பரை  சேர்ந்தவராக இருக்க லாம் என்று தெரிவித்தார்.